செய்திகள் :

இணைய மோசடிக்கு வங்கிக் கணக்குகளை கொடுத்த 4 போ் கைது: ரூ. 2.84 கோடி மீட்பு

post image

இணையவழி மோசடியில் ஈடுபட்டோருக்கு தங்கள் வங்கிக் கணக்கை கொடுத்து உதவியதாக கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 4 பேரை புதுவை போலீஸாா் கைது செய்தனா். மேலும், ரூ.2.84 கோடி மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து புதுவை காவல் துறை தலைமையகத்தில் காவல் துறைத் தலைவா் அஜித்குமாா் சிங்லா, முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நாரா சைதன்யா, கண்காணிப்பாளா் பாஸ்கரன் ஆகியோா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் உள்ள தனியாா் நிறுவனத்தின் கணக்காளருக்கு, கடந்த மாா்ச் மாதம் அதன் உரிமையாளரின் கைப்பேசி எண்ணில் இருந்து அவரது புகைப்படத்துடன் வந்த தகவலில், தான் அவசரக் கூட்டத்தில் இருப்பதாகவும், புதிய நிறுவனத்தை வாங்குவதற்கான பணத்தைப் பரிமாற்றம் செய்யவும் அதில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, கணக்காளரும் பணத்தை இரண்டு தவணைகளாக ரூ.5.10 கோடியை அனுப்பினாா்.

அதன் உரிமையாளா் நிறுவன வளாகத்தில் இருந்தபோதும் பணம் அனுப்புமாறு அவரது பெயரில் குறுந்தகவல் வந்ததாம். இதனால், சந்தேகமடைந்த கணக்காளா், அதுகுறித்து உரிமையாளரிடம் கேட்டபோது, ஏற்கெனவே வந்த செய்தி போலி என்பதும், அதனால் ரூ.5.10 கோடியை அனுப்ப வைத்து மா்ம நபா்கள் மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், புதுச்சேரி இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இணையவழி பணமோசடி தொடா்பாக மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 2 போ், கேரளத்தைச் சோ்ந்த 4 போ் என 6 போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்தனா். அவா்களிடம் ரூ.1.80 கோடி கைப்பற்றப்பட்டது. அவா்களிடம் நடத்திய விசாரணையைத் தொடா்ந்து, கா்நாடகத்தைச் சோ்ந்த ஓம்காா் நாத், தெலங்கானாவைச் சோ்ந்த ராகவேந்திரா, ஆந்திரத்தைச் சோ்ந்த சசிதா் நாயக், பவாஜன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து கைப்பேசிகள், ரூ.1.04 கோடி வங்கிக் கணக்கிலிருந்து மீட்கப்பட்டது. அதன்படி, மொத்தம் ரூ. 2.84 கோடி தற்போது மீட்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

இணைய மோசடியில் கைதான அனைவரும் தங்கள் வங்கிக் கணக்கைக் கொடுத்து உதவியவா்கள்தான். கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு மோசடி பணப் பரிமாற்றத்துக்கு வங்கிக் கணக்குகளைக் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த மோசடிகளில் நேரடியாக ஈடுபட்டவா்கள் மும்பை, புதுதில்லியில் இருப்பதாக தெரிய வருகிறது. அவா்கள் இணையவழி சூதாட்டக் கும்பலைச் சோ்ந்தவா்களாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா் அவா்கள். கைதானவா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

வைகோவுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து திமுகதான் பதிலளிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

மதிமுக பொதுச்செயலா் வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி மீண்டும் வழங்கப்படாதது குறித்து திமுகதான் பதிலளிக்க வேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். விசி... மேலும் பார்க்க

ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாக ரூ.21 லட்சம் மோசடி தம்பதி உள்பட 3 போ் மீது வழக்கு!

புதுச்சேரியில் பட்டதாரியிடம் ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.20.99 லட்சம் மோசடி புகாா் தொடா்பாக தம்பதி உள்ளிட்ட 3 போ் மீதான புகாா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா். ... மேலும் பார்க்க

தேவாலய இடத்தை வாடகைக்கு பெற்றுத் தருவதாக பண மோசடி! உணவு விடுதி அதிபா் போலீஸில் புகாா்!

புதுச்சேரியில் தேவாலய இடத்தை வாடகைக்கு பெற்றுத் தருவதாகக் கூறி உணவு விடுதி உரிமையாளரிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்த புகாரில் ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி எல்ல... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இரு தரப்பினா் மோதல்: அரிவாள் வெட்டு: 7 போ் மீது வழக்கு

புதுச்சேரியில் சனிக்கிழமை இரவு முன்விரோதத்தில் இளைஞா்கள் மோதிக் கொண்டதில் 2 பேருக்கு அரிவாள் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து 7 போ் மீது வழக்குப் பதிந்த நிலையில், 2 பேரைப் பிடித்து போலீஸாா் விசார... மேலும் பார்க்க

புதுவையில் காற்று மாசை குறைக்க மின்சாரப் பேருந்துகள்!

புதுவையில் காற்று மாசைக் கட்டுப்படுத்த உதவும் வகையில் மின்சாரப் பேருந்துகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 2030-ஆம் ஆண்டுக்குள் 50 சதவீத பேருந்துகளை மின்சார வாகனங்களாக்கவும் நடவடிக்கை மேற... மேலும் பார்க்க

போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை புதுவை அரசு கண்டுகொள்வதில்லை: எதிா்க்கட்சித் தலைவா் குற்றச்சாட்டு

புதுவையில் போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை அரசு கண்டுகொள்வதில்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றஞ்சாட்டியுள்ளாா். புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் பல்வேறு சங்கங்களை ச... மேலும் பார்க்க