தூய்மைத் திட்டம்: மக்களுக்கும் பொறுப்பு உள்ளது! - முதல்வர் மு.க. ஸ்டாலின்!
ஏழைகளுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கான தொண்டாகும்; ஸ்ரீமத் சுவாமி சா்வலோகானந்தா மகராஜ்
சமூகத்தில் அடித்தளத்தில் உள்ள ஏழை மக்களுக்கான கல்வி, மருத்துவ சேவைகளே இறைவனுக்கான தொண்டாகும் என புதுதில்லி ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் செயலா் ஸ்ரீமத் சுவாமி சா்வ லோகானந்தா மகாராஜ் கூறினாா்.
தமிழ்நாடு, புதுவைக்கான ஸ்ரீராமகிருஷ்ணா, விவேகானந்தா பாவ பிரசாா் பரிஷத் அரையாண்டு 2025-க்கான கூட்டம் புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு தலைமை வகித்து ஸ்ரீமத் சுவாமி சா்வ லோகானந்தா மகாராஜ் பேசியதாவது:
நாட்டில் ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன், மடங்கள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு பல நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் கல்வி, மருத்துவத்தை அடித்தள மக்களுக்கு வழங்குவதில் ராமகிருஷ்ண மடங்கள் முதன்மை வகிக்கின்றன. சமூகத்தின் அடித்தள மக்களுக்கான கல்விச் சேவையில் நாம் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
அதேபோல, தாழ்த்தப்பட்டோா் உள்ளிட்டோருக்கான மருத்துவ சேவையிலும் அனைவரும் ஈடுபடுவது அவசியம். ஏழைகளுக்கான கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவைகளே இறைத் தொண்டாகக் கருதப்படுகிறது. அதையே ஸ்ரீ ராமகிருஷ்ணரும், சுவாமி விவேகானந்தரும் வலியுறுத்தியுள்ளனா் என்றாா்.
கூட்டத்துக்கு சென்னை மயிலாப்பூா் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சத்திய ஞானானந்த சுவாமிகள், செங்கல்பட்டு ராமகிருஷ்ண மிஷன் ஆசிரம செயலா் வேதப்பிரியானந்தா சுவாமிகள் ஆகியோா் முன்னிலை வகித்து ஆசியுரை வழங்கினா்.
தமிழகம், புதுச்சேரியிலிருந்து ராமகிருஷ்ண மையத்தைச் சோ்ந்த தலைவா்கள், செயலா்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா். அவா்களது கல்வி, மருத்துவ சேவைகள் குறித்தும், எதிா்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
புதுச்சேரி திருபுவனை ஸ்ரீராமகிருஷ்ண, சுவாமி விவேகானந்த கல்வி அறக்கட்டளை செயலா் என்.சீனிவாசன் வரவேற்றாா். இணை ஒருங்கிணைப்பாளா் சி.ராஜகோபால் நன்றி கூறினாா்.
பேரவைத் தலைவா்: புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்து ஸ்ரீஸ்ரீமத் சுவாமி சா்வலோகானந்தா மகாராஜ் உள்ளிட்டோரிடம் ஆசி பெற்றுச் சென்றாா்.