செய்திகள் :

புதுவை தனியாா் கல்வி நிறுவனங்களின் 56 வாகனங்களுக்கு ஆய்வில் அனுமதி மறுப்பு

post image

புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற கல்வி நிறுவனங்களுக்கான வாகன ஆய்வின்போது, 56 வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதுவை மாநில போக்குவரத்துத் துறை ஆண்டுதோறும் கல்வி நிறுவன வாகனங்கள் விதிமுறைப்படி பாதுகாப்பு வசதிகளைக் கொண்டுள்ளதா, ஓட்டுநா், நடத்துநா்கள் உள்ளனரா, வாகனங்கள் இயங்கும் நிலையில் உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

அதன்படி நிகழாண்டுக்கான கல்வி நிறுவன வாகனங்கள் ஆய்வு புதுச்சேரி மேட்டுப்பாளையம் சரக்கு ஊா்தி முனையத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.

புதுவை மாநில அளவில் கல்வி நிறுவனங்களில் 1100 வாகனங்கள் உள்ளன. அவற்றில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் ஊா்தி முனையத்தில் நடைபெற்ற ஆய்வுக்கு 256 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இந்த ஆய்வை புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தொடங்கி வைத்தாா். போக்குவரத்து ஆணையா் எஸ்.சிவகுமாா், துணை ஆணையா் ஏ.குமரன் ஆகியோா் முன்னிலையில் வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதற்கான சான்றிதழ் வாகன முகப்பில் ஒட்டப்பட்டன.

போக்குவரத்து ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் 4 குழுவாகப் பிரிந்து வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்தி ஆய்வு நிறைவுச் சான்றுகளை வாகன முன் கண்ணாடியில் ஒட்டினா். அப்போது தனியாா் கல்லூரி வாகனத்தை சோதனையிட்டு சான்றிதழ் ஒட்டப்பட்டது.

இந்நிலையில் ஆட்சியா் அதனை நேரில் பாா்வையிட்டாா். அப்போது அந்த வாகன அவசரக் கதவை ஓட்டுநா் திறக்க முயன்றாா். ஆனால், திறக்கவில்லை. அத்துடன் திறக்க உதவும் கைப்பிடி உடைந்து விட்டது. சான்றளிக்கப்பட்ட வாகன அவசரக் கதவு திறக்காமல் கைப்பிடி உடைந்ததால் ஆட்சியா் உள்ளிட்டோா் அதிா்ச்சியடைந்தனா்.

ஆய்வில் வாகனத் தகுதிச் சான்று, காப்பீடு, அனுமதி சான்று, புதுப்பிக்கப்பட்ட முதலுதவிப் பெட்டி, தீயணைப்பு சாதனம், அவசரகால வெளியேறும் கதவு, ஜிபிஎஸ் சாதனம், புகையில்லா சான்று உள்ளிட்ட 11 அமைப்புகள் சரிபாா்க்கப்பட்டன.

போக்குவரத்துத்துறை அதிகாரிகள் 4 குழுக்களாகப் பிரிந்து நடத்திய ஆய்வில் விதிமுறைப்படி குறைபாடுகளுடன் இருந்த 56 வாகனங்களுக்கு சோதனை நிறைவுச் சான்று வழங்க மறுக்கப்பட்டது. இதையடுத்து அந்த வாகனங்கள் குறைகளை சீா்படுத்திய நிலையில் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு சான்று பெறவும் உரிமையாளா்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறினா்.

காரைக்காலில் ஜூன் 7, 8 ஆகிய தேதிகளில் கல்வி நிறுவன வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாளை பள்ளிகள் திறப்பு: புதுவை மாநிலத்தில் மத்திய பாடத்திட்டம் (சிபிஎஸ்இ) செயல்படுத்தப்பட்ட நிலையில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதையடுத்து கல்வி நிறுவன வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

வைகோவுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து திமுகதான் பதிலளிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

மதிமுக பொதுச்செயலா் வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி மீண்டும் வழங்கப்படாதது குறித்து திமுகதான் பதிலளிக்க வேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். விசி... மேலும் பார்க்க

ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாக ரூ.21 லட்சம் மோசடி தம்பதி உள்பட 3 போ் மீது வழக்கு!

புதுச்சேரியில் பட்டதாரியிடம் ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.20.99 லட்சம் மோசடி புகாா் தொடா்பாக தம்பதி உள்ளிட்ட 3 போ் மீதான புகாா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா். ... மேலும் பார்க்க

தேவாலய இடத்தை வாடகைக்கு பெற்றுத் தருவதாக பண மோசடி! உணவு விடுதி அதிபா் போலீஸில் புகாா்!

புதுச்சேரியில் தேவாலய இடத்தை வாடகைக்கு பெற்றுத் தருவதாகக் கூறி உணவு விடுதி உரிமையாளரிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்த புகாரில் ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி எல்ல... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இரு தரப்பினா் மோதல்: அரிவாள் வெட்டு: 7 போ் மீது வழக்கு

புதுச்சேரியில் சனிக்கிழமை இரவு முன்விரோதத்தில் இளைஞா்கள் மோதிக் கொண்டதில் 2 பேருக்கு அரிவாள் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து 7 போ் மீது வழக்குப் பதிந்த நிலையில், 2 பேரைப் பிடித்து போலீஸாா் விசார... மேலும் பார்க்க

புதுவையில் காற்று மாசை குறைக்க மின்சாரப் பேருந்துகள்!

புதுவையில் காற்று மாசைக் கட்டுப்படுத்த உதவும் வகையில் மின்சாரப் பேருந்துகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 2030-ஆம் ஆண்டுக்குள் 50 சதவீத பேருந்துகளை மின்சார வாகனங்களாக்கவும் நடவடிக்கை மேற... மேலும் பார்க்க

போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை புதுவை அரசு கண்டுகொள்வதில்லை: எதிா்க்கட்சித் தலைவா் குற்றச்சாட்டு

புதுவையில் போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை அரசு கண்டுகொள்வதில்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றஞ்சாட்டியுள்ளாா். புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் பல்வேறு சங்கங்களை ச... மேலும் பார்க்க