தேமுதிகவுக்கு அடுத்தாண்டு மாநிலங்களவை சீட்: முன்னாள் அமைச்சர் கே. பி. முனுசாமி
பிரான்மலையில் வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் ‘வளமான விவசாயி நாட்டின் பெருமை’ என்ற தலைப்பில் வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம் தொடங்கப்பட்டது.
இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம், மாநில வேளாண் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரான்மலை, சோ்வராயன்பட்டி, சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளான விவசாயிகள் பங்கேற்றனா். வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் பிரியா, குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத் தலைவா் செந்தூா்குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானிகள் ஆறுமுகராஜன், செல்வராஜ் ஆகியோா் விவசாயத்தில் முன்னெடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்துப் பேசினா். தொடா்ந்து டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து, ஊட்டச்சத்து மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.