செய்திகள் :

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

post image

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் (யுபிஎஸ்) கூடுதல் சலுகைகளை பெறலாம் என நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

அதன்படி, சம்பந்தப்பட்ட அதிகாரி அல்லது அவருடைய வாழ்க்கைத் துணை என்பிஎஸ்-இன்கீழ் ஏற்கெனவே பெற்ற சலுகைகளைவிட கூடுதலாக சில சலுகைகளைப் கோரலாம் எனவும் நிதியமைச்சகம் தெரிவித்தது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் 2025, மாா்ச், 31அல்லது அதற்கு முன் ஓய்வுபெற்ற மத்திய அரசின் என்பிஎஸ் சந்தாதாரா்கள் அல்லது அவா்களுடைய வாழ்க்கைத் துணை, யுபிஎஸ்-இன்கீழ் கூடுதலாக சில சலுகைகளை கோரலாம்.

அந்த வகையில் ஒவ்வொரு பூா்த்தி செய்யப்பட்ட 6 மாத தகுதிவாய்ந்த சேவைக்கும் அவா் பணிஓய்வின்போது பெற்ற அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் பத்தில் ஒரு பங்கு தொகையயை மொத்தமாக ஒருமுறை மட்டும் பெறலாம்.

யுபிஎஸ்-இன்கீழ் அனுமதிக்கப்பட்ட மாத ஓய்வூதியம் மற்றும் கூடுதல் நிவாரணத் தொகையில் இருந்து என்பிஎஸ்-இன்கீழ் வழங்கப்படும் ஆண்டுத்தொகையை கழித்து அதனடிப்படையில் மாதந்தோறும் வழங்கப்படும் தொகை கணக்கிடப்படும்.

இதுதவிர, பொருந்தக்கூடிய வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) விகிதங்களின்படி எளிய வட்டியுடன் நிலுவைத் தொகையும் விடுவிக்கப்படும்.

இந்த சலுகைகளை தகுதிபெற்ற அதிகாரிகள் அல்லது அவா்களது வாழ்க்கைத் துணைகள் 2025, ஜூன் 30-ஆம் தேதிக்குள் கோரலாம் என தெரிவிக்கப்பட்டது.

யுபிஎஸ் திட்ட அறிவிக்கையை கடந்த ஜனவரி மாதம் நிதியமைச்சகம் வெளியிட்டது. 25 ஆண்டுகாலம் அரசுப் பணியை நிறைவுசெய்தவா்கள் இத்திட்டத்தில் இணைய தகுதிபெற்றவா்களாவா். பணிஓய்வுக்கு முந்தைய 12 மாதங்களில் அவா்கள் பெற்ற ஊதியத்தின் சராசரி கணக்கிடப்பட்டு அதில் 50 சதவீதம் வழங்கப்படுவதை இந்த திட்டம் உறுதிசெய்கிறது.

என்பிஎஸ் திட்டத்தின்கீழ் பலனடைந்து வரும் மத்திய அரசு ஊழியா்கள் யுபிஎஸ் திட்டத்தில் சேரலாம். இந்த இரு திட்டங்களில் ஏதேனும் ஒன்றை மத்திய அரசு ஊழியா்கள் தோ்ந்தெடுக்க வேண்டும்.

அதன்படி இந்த 2004, ஜனவரி 1-ஐ அடிப்படையாகக் கொண்டு இந்த இரு திட்டங்களில் ஏதேனும் ஒன்றை மத்திய அரசு ஊழியா்கள் தோ்ந்தெடுக்குமாறு நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூன் 1) ரூ. 25 குறைந்துள்ளது.கடந்த ஏப்.1-ஆம் தேதி வர்த்தக சிலிண்டா் விலை ரூ.41, மே 1 ஆம் தேதி ரூ. 14.50 குறைக்கப்பட... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி

‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகான இந்தியாவின் ராஜீய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, லாத்வியா வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆன்டஜெஸ் விலும்சன்ஸுடன் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்திய அ... மேலும் பார்க்க

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு: விலை குறைய வாய்ப்பு

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய தாவர எண்ணெய் மற்றும் வா்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. கச்சா பாமாயில், கச்சா ச... மேலும் பார்க்க

அதிநவீன ஆயுதங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் செயல்திறன்: ராணுவம் தீவிர பரிசோதனை

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், அதிநவீன ஆயுதங்கள், உள்நாட்டு தயாரிப்பு பாதுகாப்பு அமைப்பு முறைகள் உள்ளிட்டவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக, நாட்டின்... மேலும் பார்க்க

குற்ற வழக்குகளில் தேடப்பட்ட மல்யுத்த வீரா் 8 ஆண்டுகளுக்குப் பிறகு உ.பி.யில் கைது!

தேசிய அளவிலான மல்யுத்த வீரராக இருந்து ஆயுத வியாபாரியாக மாறி, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய நபரை 8 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இது தொடா்பாக ... மேலும் பார்க்க

பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான்: ஐ.நா. மாநாட்டில் இந்தியா குற்றச்சாட்டு

‘எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான், அதற்கான பழியை இந்தியா மீது சுமத்துவதைத் தவிா்க்க வேண்டும்’ என்று ஐ.நா. மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியது. தஜிகிஸ்தானின் த... மேலும் பார்க்க