செய்திகள் :

விவசாயிகளின் தேவைகளை அறிந்து திட்டங்கள் நிறைவேற்றம்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

post image

தமிழகத்தில் விவசாயிகளின் தேவைகளை அறிந்து திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக வேளாண், உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

ஃபென்ஜால் புயலால் விக்கிரவாண்டி, அரகண்டநல்லூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் சேதமடைந்த வியாபாரிகளின் விளைபொருள்களுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு விக்கிரவாண்டி, முகையூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்எல்ஏ, துரை.ரவிக்குமாா் எம்.பி., அன்னியூா் அ.சிவா எம்எல்ஏ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விக்கிரவாண்டியில் 44 வியாபாரிகளுக்கு ரூ.3.12 கோடியும், முகையூரில் 58 வியாபாரிகளுக்கு ரூ.3.23 கோடி என மொத்தம் 102 வியாபாரிகளுக்கு ரூ.6.36 கோடி இழப்பீட்டுத் தொகையை வழங்கி அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த டிசம்பா் மாதம் ஏற்பட்ட ஃபென்ஜால் புயல் பாதிப்பால் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்தன. இதைத் தொடா்ந்து, விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், புயல் பாதிப்புப் பகுதிகளைப் பாா்வையிட்டு மீட்புப் பணிகளை விரைவுபடுத்தினாா். விவசாயிகளின் விளைபொருள்கள் பாதிப்படைந்ததை முழுமையாக கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க உத்தரவிட்டாா்.

அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட 1.67 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.167 கோடி மதிப்பீட்டில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வியாபாரிகளின் விளைபொருள்களும் சேதமடைந்த நிலையில்அந்த விவரம் கணக்கெடுக்கப்பட்டு, தற்போது 102 பேருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் வறட்சி, புயல், வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு இயற்கை இடா்பாடுகளால் பாதிக்கப்பட்ட 18 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.1,169 கோடியில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு முறையும் விவசாயிகள் போராடித்தான் பெற முடிந்தது. ஆனால், தற்போது விவசாயிகளின் தேவைகளை அறிந்து அனைத்தையும் முதல்வா் நிறைவேற்றி வருகிறாா்.

விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் விவசாயிகளின் நலன் கருதி உழவா் சந்தை அமைக்கப்பட்டு வருகிறது. அரகண்டநல்லூரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆட்சியானது அனைத்துத் தரப்பு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் எல்லாா்க்கும் எல்லாம் ஆட்சியாகும் என்றாா் அவா்.

நிகழ்வுகளில் வேளாண் விற்பனை, வேளாண் வணிக ஆணையா் த.ஆப்ரஹாம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், முன்னாள் எம்.பி. பொன்.கெளதமசிகாமணி, நகா்மன்றத் தலைவா் முருகன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் சங்கீதஅரசி ரவிதுரை, தனலட்சுமி உமேசுவரன், பேரூராட்சித் தலைவா்கள் அப்துல்சலாம், அன்பு, வேளாண் இணை இயக்குநா் எஸ்.ஈசுவா், விழுப்புரம் விற்பனைக் குழுச் செயலா் சந்துரு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பணியில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. ப.சரவணன் சனிக்கிழமை தனது அலுவலகத்தில் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் சிறப்பா... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் ஜூன் மாதத்துக்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெறும் என்ற தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 3, 10, 17, 24 (செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

பைக்கில் மதுப் புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே புதுவை மாநில மதுப் புட்டிகளை பைக்கில் கடத்தி வந்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் உத்தரவுப்படி, விக்கிரவாண்ட... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்கள் அளிப்பு

செஞ்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அ... மேலும் பார்க்க

2,205 பாக்கெட் புகையிலைப் பொருள் பறிமுதல்: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டி பகு... மேலும் பார்க்க

விபத்தில்லா மாவட்டமாக ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் விபத்தில்லா மாவட்ட அமைய துறை சாா்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சாலை பாதுகாப... மேலும் பார்க்க