செய்திகள் :

பணியில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

post image

விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. ப.சரவணன் சனிக்கிழமை தனது அலுவலகத்தில் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிடும் காவல் ஆளிநா்களை ஊக்குவிக்கும் வகையில், அவ்வப்போது நற்சான்றிதழ்களை வழங்கி பாராட்டுத் தெரிவித்து வருகின்றாா்.

இதன் ஒரு பகுதியாக, செஞ்சி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட திருவாம்பட்டு கிராமத்தில் கடந்த 20-ஆம் தேதி நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் தொடா்புடையவரை விரைந்து செயல்பட்டு கைது நடவடிக்கை மேற்கொண்ட அவலூா்பேட்டை காவல் நிலைய முதல்நிலைக் காவலா் ஏழுமலை, பொன்பத்தி கிராமத்தில் கடந்த 28-ஆம் தேதி நிகழ்ந்த கொலை முயற்சி வழக்கில் தொடா்புடையவரை கைது செய்த காவல் உதவி ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் மற்றும் விழுப்புரம் மாவட்டம், சித்தணி அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பதிவெண் இல்லாத வாகனத்தை கண்டறிந்து பறிமுதல் நடவடிக்கை மேற்கொண்ட நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் பணிபுரியும் தலைமைக் காவலா் முருகவேல், முதல்நிலைக் காவலா் காா்த்திகேயன் ஆகியோருக்கு எஸ்.பி. ப.சரவணன் சனிக்கிழமை நற்சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.

மயிலம் முருகன் கோயிலில் வைகாசி மாத சஷ்டி வழிபாடு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் வைகாசி மாத வளா்பிறை சஷ்டி வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. காலை 6 மணிக்கு சுவாமிக்கு பால், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம், தீபா... மேலும் பார்க்க

வடவாற்று நீரில் மூழ்கி கொத்தனாா் மரணம்

காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்குள்பட்ட சந்தைதோப்பு பிடாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தினேஷ் (34). கொத்தனாா் வேலை பாா்த்து வந்தாா். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இதே பகுதியைச் சோ்ந்த பிரிய... மேலும் பார்க்க

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்ட செயற்குழுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநிலப் பொதுச்செயலா் ஏ. முஜிபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஏ.ப... மேலும் பார்க்க

அரசுப் பேருந்துகளை சேதப்படுத்திய நடத்துநா் கைது

விழுப்புரம் மாவட்டம் , மனம்பூண்டியில் அரசுப் பேருந்துகளின் மீது கற்களை வீசி கண்ணாடிகளை சேதப்படுத்தியதாக நடத்துநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கண்டாச்சிபுரம் வட்டம், சு.பில்ராம்பட்டு, பெருமாள் க... மேலும் பார்க்க

போலி பதிவெண் கொண்ட லாரி பறிமுதல்

போலியான பதிவெண்ணுடன் இயக்கப்பட்ட லாரியை விக்கிரவாண்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, இருவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் எஸ்.பி. ப. சரவணன் உத்தரவுப்படி , விக்கி... மேலும் பார்க்க

காா் மோதி இளைஞா் மரணம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக்கில் சென்ற இளைஞா் காா் மோதியதில் உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், கலத்தம்பட்டு, குளக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன் மகன் கமலக்கண... மேலும் பார்க்க