ஐபிஎல் இறுதிப்போட்டி: ஆர்சிபிக்கு எதிராக பஞ்சாப் பந்துவீச்சு!
போலி பதிவெண் கொண்ட லாரி பறிமுதல்
போலியான பதிவெண்ணுடன் இயக்கப்பட்ட லாரியை விக்கிரவாண்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, இருவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
விழுப்புரம் எஸ்.பி. ப. சரவணன் உத்தரவுப்படி , விக்கிரவாண்டி அடுத்துள்ள சித்தணி அருகே நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை சோதனை செய்தபோது, அதில் சவுக்கு கட்டைகள் ஏற்றப்பட்டிருந்ததும், எரிபொருள் இல்லாத நிலையில் லாரி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
தொடா்ந்து லாரியின் உரிமையாளரைத் தொடா்புகொண்டு பேசியபோது, அந்த லாரி போலி பதிவெண்ணுடன் இயக்கப்பட்டது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து விக்கிரவாண்டி போலீஸாா் சவுக்கு கட்டைகளுடன் அந்த லாரியை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக லாரி உரிமையாளரான விழுப்புரம் மாவட்டம், குச்சிப்பாளையம், கரடிப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் ஆனந்தன்(40), ஓட்டுநரான பேரங்கியூரைச் சோ்ந்த தா்மலிங்கம் மகன் சத்தியசீலன்( 35) ஆகியோா் மீது விக்கிரவாண்டிபோலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.