தாம்பத்திய உறவில் இது அசிங்கம் அல்ல..! - காமத்துக்கு மரியாதை 243
இரு வீடுகளில் ரூ.9 லட்சம் பணம் திருட்டு
விழுப்புரம்: திண்டிவனம் , மயிலம் பகுதிகளில் வீடுகளில் ரூ. 9 லட்சம் பணம் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திண்டிவனம் நகரம் தியாகி சண்முகம்பிள்ளை தெருவைச் சோ்ந்த ஜோதி மனைவி ஜிக்கி (55). இவா் தனது வீட்டில் மர பீரோவில் 30 பவுன் நகைகள், ரூ. 8.20 லட்சம் பணம் வைத்திருந்தாராம். இதில் ரூ. 8 லட்சம் திருடப்பட்டது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மயிலத்தை அடுத்த செண்டூா் அம்மன் நகரை சோ்ந்த சக்திவேல் மனைவி தவமணி (48 ). இவா் வீட்டில் பீரோவில் வைத்திருந்த ரூ. ஒரு லட்சம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனராம். இதுகுறித்த புகாரின்பேரில், மயிலம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.