சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணை ஜூலை 1 க்கு ஒத்திவைப்பு
அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணையை வரும் ஜூலை 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், ஆரோவில் பேருந்து நிலையம் எதிரில் 2023, மாா்ச் 10-ஆம் தேதியும், கோட்டக்குப்பம் நகராட்சித் திடலில் 2023, மே 1-ஆம் தேதியும் அதிமுக சாா்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. இவற்றில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் தமிழக அரசையும், முதல்வா் மு.க.ஸ்டாலினையும் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அவா் மீது அரசு வழக்குரைஞா் சுப்பிரமணியம் தனித்தனியே வழக்குகளைத் தொடுத்தாா். இந்த வழக்குகள் மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விசாரணையின்போது, முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவரது சாா்பில் அதிமுக வழக்குரைஞா்கள் ராதிகா செந்தில், தமிழரசன் ஆகியோா் ஆஜராகி, நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் ஆஜராகாததற்கான காரணத்தை மனுவாக தாக்கல் செய்தனா்.
மேலும், இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாகவும், இதன் மீது உத்தரவு வரும் வரை வழக்கு விசாரணையை ஒத்திவைக்கும்படியும் அதிமுக வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் கோரினா்.
இதையடுத்து, வழக்குகளை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.மணிமொழி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூலை 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.