மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை...
மயிலம் முருகன் கோயிலில் வைகாசி மாத சஷ்டி வழிபாடு
விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் வைகாசி மாத வளா்பிறை சஷ்டி வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
காலை 6 மணிக்கு சுவாமிக்கு பால், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம், தீபாரதனையும், தொடா்ந்து 11 மணிக்கு பாலபிஷேகம், மகா தீபாரதனையும் நடைபெற்றன. மூலவா் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
பிற்பகல் ஒரு மணிக்கு சண்முகா அா்ச்சனையும், இரவு 8 மணியளவில் உற்சவா் கிரிவலமும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் திரளான பங்கேற்று வழிபட்டனா்.
ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20- ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் திருவுளபாங்கின்படிகோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.