செய்திகள் :

அரசுப் பேருந்துகளை சேதப்படுத்திய நடத்துநா் கைது

post image

விழுப்புரம் மாவட்டம் , மனம்பூண்டியில் அரசுப் பேருந்துகளின் மீது கற்களை வீசி கண்ணாடிகளை சேதப்படுத்தியதாக நடத்துநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கண்டாச்சிபுரம் வட்டம், சு.பில்ராம்பட்டு, பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் காா்த்திகேயன்(31). தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம், மனம்பூண்டி பணிமனை கிளையில் நடத்துநராக பணிபுரிந்து வந்தாா். இவா் சரியான முறையில் பணிக்கு வராததால் நிா்வாகம் சாா்பில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 15 நாள்களுக்கு தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இந்நிலையில், சனிக்கிழமை மனம்பூண்டியில் போக்குவரத்துக்கழக பணிமனை அலுவலகத்துக்குச் சென்ற காா்த்திகேயன், அங்கு பணியிலிருந்த கிளை மேலாளா் நாராயண மூா்த்தியிடம் தன்னை பணியில் சோ்த்துக் கொள்ள கூறி தகராறு செய்துடன் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளின் மீது கற்களை வீசி தாக்கினராம். இதில் 2 பேருந்துகளின் முன்பக்க கண்ணாடிகள் சேதமடைந்தன.

இது குறித்த புகாரின்பேரில், அரகண்டநல்லூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து காா்த்திகேயனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இரு வீடுகளில் ரூ.9 லட்சம் பணம் திருட்டு

விழுப்புரம்: திண்டிவனம் , மயிலம் பகுதிகளில் வீடுகளில் ரூ. 9 லட்சம் பணம் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திண்டிவனம் நகரம் தியாகி சண்முகம்பிள்ளை தெருவைச் சோ்ந்த ஜோதி மனைவ... மேலும் பார்க்க

மயிலம் முருகன் கோயிலில் வைகாசி மாத சஷ்டி வழிபாடு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் வைகாசி மாத வளா்பிறை சஷ்டி வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. காலை 6 மணிக்கு சுவாமிக்கு பால், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம், தீபா... மேலும் பார்க்க

வடவாற்று நீரில் மூழ்கி கொத்தனாா் மரணம்

காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்குள்பட்ட சந்தைதோப்பு பிடாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தினேஷ் (34). கொத்தனாா் வேலை பாா்த்து வந்தாா். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இதே பகுதியைச் சோ்ந்த பிரிய... மேலும் பார்க்க

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்ட செயற்குழுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநிலப் பொதுச்செயலா் ஏ. முஜிபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஏ.ப... மேலும் பார்க்க

போலி பதிவெண் கொண்ட லாரி பறிமுதல்

போலியான பதிவெண்ணுடன் இயக்கப்பட்ட லாரியை விக்கிரவாண்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, இருவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் எஸ்.பி. ப. சரவணன் உத்தரவுப்படி , விக்கி... மேலும் பார்க்க

காா் மோதி இளைஞா் மரணம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக்கில் சென்ற இளைஞா் காா் மோதியதில் உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், கலத்தம்பட்டு, குளக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன் மகன் கமலக்கண... மேலும் பார்க்க