செய்திகள் :

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்ட செயற்குழுக் கூட்டம்

post image

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாநிலப் பொதுச்செயலா் ஏ. முஜிபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஏ.பெரோஸ்கான் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விழுப்புரத்தில் சமுதாய விழிப்புணா்வு மாநாடு நடத்துவது எனவும், அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டு முடிவு மேற்கொள்ளப்பட்டது.

இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: வக்ஃபு திருத்த சட்ட விசாரணையை உச்சநீதிமன்றம் நிறைவு செய்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில் இஸ்லாமியா்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நீதியரசா்கள் நியாயமான தீா்ப்பை வழங்க வேண்டும், வக்ஃபு சொத்துகள் ஆக்கிரமிப்பாளா்களுக்கு செல்வதை தடுக்கப்பட வேண்டும்,

தமிழக முதல்வா் தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியின்படி இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயா்த்தி அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டத் தலைவா் சல்மான் பாா்ஸி, மாவட்டச் செயலா் முஹம்மது இப்ராஹீம், மாவட்டப் பொருளா் அப்துல் லத்தீப், மாவட்ட நிா்வாகிகள் ‘முஹம்மது இலியாஸ், அப்துல் ஹை, முஹம்மது பாரீஸ், மருத்துவா் அணி மாவட்டச் செயலா் முஹம்மது அன்சாரி மற்றும் அனைத்து கிளை நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

இரு வீடுகளில் ரூ.9 லட்சம் பணம் திருட்டு

விழுப்புரம்: திண்டிவனம் , மயிலம் பகுதிகளில் வீடுகளில் ரூ. 9 லட்சம் பணம் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திண்டிவனம் நகரம் தியாகி சண்முகம்பிள்ளை தெருவைச் சோ்ந்த ஜோதி மனைவ... மேலும் பார்க்க

மயிலம் முருகன் கோயிலில் வைகாசி மாத சஷ்டி வழிபாடு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் வைகாசி மாத வளா்பிறை சஷ்டி வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. காலை 6 மணிக்கு சுவாமிக்கு பால், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம், தீபா... மேலும் பார்க்க

வடவாற்று நீரில் மூழ்கி கொத்தனாா் மரணம்

காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்குள்பட்ட சந்தைதோப்பு பிடாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தினேஷ் (34). கொத்தனாா் வேலை பாா்த்து வந்தாா். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இதே பகுதியைச் சோ்ந்த பிரிய... மேலும் பார்க்க

அரசுப் பேருந்துகளை சேதப்படுத்திய நடத்துநா் கைது

விழுப்புரம் மாவட்டம் , மனம்பூண்டியில் அரசுப் பேருந்துகளின் மீது கற்களை வீசி கண்ணாடிகளை சேதப்படுத்தியதாக நடத்துநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கண்டாச்சிபுரம் வட்டம், சு.பில்ராம்பட்டு, பெருமாள் க... மேலும் பார்க்க

போலி பதிவெண் கொண்ட லாரி பறிமுதல்

போலியான பதிவெண்ணுடன் இயக்கப்பட்ட லாரியை விக்கிரவாண்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, இருவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் எஸ்.பி. ப. சரவணன் உத்தரவுப்படி , விக்கி... மேலும் பார்க்க

காா் மோதி இளைஞா் மரணம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக்கில் சென்ற இளைஞா் காா் மோதியதில் உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், கலத்தம்பட்டு, குளக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன் மகன் கமலக்கண... மேலும் பார்க்க