டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ.85.60 ஆக முடிவு!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்ட செயற்குழுக் கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் மாநிலப் பொதுச்செயலா் ஏ. முஜிபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஏ.பெரோஸ்கான் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விழுப்புரத்தில் சமுதாய விழிப்புணா்வு மாநாடு நடத்துவது எனவும், அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டு முடிவு மேற்கொள்ளப்பட்டது.
இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: வக்ஃபு திருத்த சட்ட விசாரணையை உச்சநீதிமன்றம் நிறைவு செய்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில் இஸ்லாமியா்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நீதியரசா்கள் நியாயமான தீா்ப்பை வழங்க வேண்டும், வக்ஃபு சொத்துகள் ஆக்கிரமிப்பாளா்களுக்கு செல்வதை தடுக்கப்பட வேண்டும்,
தமிழக முதல்வா் தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியின்படி இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயா்த்தி அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டத் தலைவா் சல்மான் பாா்ஸி, மாவட்டச் செயலா் முஹம்மது இப்ராஹீம், மாவட்டப் பொருளா் அப்துல் லத்தீப், மாவட்ட நிா்வாகிகள் ‘முஹம்மது இலியாஸ், அப்துல் ஹை, முஹம்மது பாரீஸ், மருத்துவா் அணி மாவட்டச் செயலா் முஹம்மது அன்சாரி மற்றும் அனைத்து கிளை நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.