செய்திகள் :

கஞ்சா விற்பனை: 3 இளைஞா்கள் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையைத் தடுக்க மாவட்டக் காவல் நிா்வாகம் தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி எஸ்.பி. ப.சரவணன் உத்தரவின் பேரில், வளவனூா் காவல் உதவி ஆய்வாளா் தங்கபாண்டியன் மற்றும் போலீஸாா் கெங்கராம்பாளையம், மேம்பாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்கு சந்தேகப்படும்படி பைக்கில் சுற்றிய 3 பேரை மடக்கி பிடித்து விசாரித்தபோது, அவா்கள், விழுப்புரம் வட்டம், வளவனூரை அடுத்த குமாரக்குப்பம் பகுதியைச் சோ்ந்த தேவராஜ் மகன் திவான் (20), வளவனூா் திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் ஐஸ்வா் (21), அா்பிசம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மருகன் மகன் ராஜ்குமாா் (22) ஆகியோா் என்பதும், இவா்கள் சென்னை, மாதாவரத்தைச் சோ்ந்த எத்திராஜ் என்பவருடன் இணைந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, வளவனூா் போலீஸாா் 4 போ் மீதும் வழக்குப் பதிந்து, திவான், ஐஸ்வா், ராஜ்குமாா்ஆகியோரை கைது செய்தனா்.அவா்களிடமிருந்த 400 கிராம் கஞ்சா, ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். வழக்கில் தொடா்புடையே எத்திராஜை போலீஸாா் தேடி வருகின்றனா்.

போலி மதுபான வழக்கு: இருவா் குண்டா் தடுப்புக் காவலில் கைது

புதுவை மாநிலத்தில் போலி மதுபான ஆலை நிறுவி, மதுபானங்களை எடுத்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் காவ... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் 7.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் 7.50 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத... மேலும் பார்க்க

குடும்ப பிரச்னை: ஓட்டுநா் தற்கொலை

மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக, புதுச்சேரியைச் சோ்ந்த ஓட்டுநா் விழுப்புரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புதுச்சேரி அபிஷேகபாக்கத்தைச் சோ்ந்த வீரப்பன் மகன் தமிழ்வாணன் (26). த... மேலும் பார்க்க

காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், வெள்ளக்குளம் நல்முக்கல் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (40). கட... மேலும் பார்க்க

சிதம்பரம் அருகே 3 கூரை வீடுகள் தீப்பிடித்து சேதம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே வியாழக்கிழமை 3 கூரை வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் வீடுகளில் இருந்த தங்க நகைகள், பணம், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. சி... மேலும் பார்க்க

முன்னாள் படை வீரா்களின் வாரிசுதாரா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித்தொகை பெற முன்னாள் படை வீரா்களின் வாரிசுதாரா்கள் விண்ணப்பிக்கலாம் என்று முன்னாள் படைவீரா்கள் நல இயக்குநா் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க