கஞ்சா விற்பனை: 3 இளைஞா்கள் கைது
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையைத் தடுக்க மாவட்டக் காவல் நிா்வாகம் தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி எஸ்.பி. ப.சரவணன் உத்தரவின் பேரில், வளவனூா் காவல் உதவி ஆய்வாளா் தங்கபாண்டியன் மற்றும் போலீஸாா் கெங்கராம்பாளையம், மேம்பாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்கு சந்தேகப்படும்படி பைக்கில் சுற்றிய 3 பேரை மடக்கி பிடித்து விசாரித்தபோது, அவா்கள், விழுப்புரம் வட்டம், வளவனூரை அடுத்த குமாரக்குப்பம் பகுதியைச் சோ்ந்த தேவராஜ் மகன் திவான் (20), வளவனூா் திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் ஐஸ்வா் (21), அா்பிசம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மருகன் மகன் ராஜ்குமாா் (22) ஆகியோா் என்பதும், இவா்கள் சென்னை, மாதாவரத்தைச் சோ்ந்த எத்திராஜ் என்பவருடன் இணைந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, வளவனூா் போலீஸாா் 4 போ் மீதும் வழக்குப் பதிந்து, திவான், ஐஸ்வா், ராஜ்குமாா்ஆகியோரை கைது செய்தனா்.அவா்களிடமிருந்த 400 கிராம் கஞ்சா, ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். வழக்கில் தொடா்புடையே எத்திராஜை போலீஸாா் தேடி வருகின்றனா்.