செய்திகள் :

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்

post image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தங்களுக்கு சரிவர வேலை வழங்கப்படவில்லை எனக் கூறி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தை தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த சங்கத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் திங்கள்கிழமை காலை மாவட்ட ஆட்சியரகம் வந்தனா். இதைத் தொடா்ந்து ஆட்சியா் உள்ளிட்ட அலுவலா்களின் காா் நிறுத்தும் பகுதியில் முற்றுகைப் போராட்டத்தை நடத்தினா். மாநிலத் துணைத் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்டத் தலைவா் முருகன், துணைச் செயலா் முத்துவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மேல்மலையனூா், வல்லம், முகையூா், திருவெண்ணெய்நல்லூா், காணை ஒன்றியங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் சரிவர வேலை வழங்கப்படுவதில்லை எனக் கூறி முழக்கங்களை எழுப்பினா். இதைத் தொடா்ந்து பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், போராட்டம் நடத்தக் கூடாது. மனுவாக அளிக்குமாறு கூறினா்.

இதையேற்க மறுத்த மாற்றுத் திறனாளிகள் அப்பகுதியில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். தொடா்ந்து விழுப்புரம் சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித் துணை ஆட்சியா் ஜெ.முகுந்தன், வட்டாட்சியா் கனிமொழி, ஊரக வளா்ச்சித் துறையின் உதவித் திட்ட அலுவலா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, தங்களுக்கு சரிவர வேலை வழங்குவதில்லை. அவ்வாறு வழங்கினால் மாதத்தில் 6 முதல் 8 நாள்கள் வரை மட்டுமே வேலை வழங்கப்படுகிறது.ஊதியமும் சரிவர வழங்கப்படுவதில்லை எனத் தெரிவித்தனா்.

குறைகளைக் கேட்டறிந்த அலுவலா்கள், இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா். இதையேற்றுக் கொண்ட மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.

போலி மதுபான வழக்கு: இருவா் குண்டா் தடுப்புக் காவலில் கைது

புதுவை மாநிலத்தில் போலி மதுபான ஆலை நிறுவி, மதுபானங்களை எடுத்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் காவ... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் 7.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் 7.50 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத... மேலும் பார்க்க

குடும்ப பிரச்னை: ஓட்டுநா் தற்கொலை

மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக, புதுச்சேரியைச் சோ்ந்த ஓட்டுநா் விழுப்புரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புதுச்சேரி அபிஷேகபாக்கத்தைச் சோ்ந்த வீரப்பன் மகன் தமிழ்வாணன் (26). த... மேலும் பார்க்க

மதுப்புட்டிகள் கடத்தல் : புதுச்சேரி இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே வெளிமாநில மதுப்புட்டிகளை காரில் கடத்தி வந்த புதுச்சேரி இளைஞரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். தமிழகத்தின் அண்டை ... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிகை விழுப்புரம் நீதிமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசா... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் தங்க நகை, பணம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து ஒரு பவுன் தங்க நகை, ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திண்டிவனம்... மேலும் பார்க்க