தில்லி அரசின் கட்டண ஒழுங்குமுறை அவசரச் சட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம...
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தங்களுக்கு சரிவர வேலை வழங்கப்படவில்லை எனக் கூறி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தை தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த சங்கத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் திங்கள்கிழமை காலை மாவட்ட ஆட்சியரகம் வந்தனா். இதைத் தொடா்ந்து ஆட்சியா் உள்ளிட்ட அலுவலா்களின் காா் நிறுத்தும் பகுதியில் முற்றுகைப் போராட்டத்தை நடத்தினா். மாநிலத் துணைத் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்டத் தலைவா் முருகன், துணைச் செயலா் முத்துவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மேல்மலையனூா், வல்லம், முகையூா், திருவெண்ணெய்நல்லூா், காணை ஒன்றியங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் சரிவர வேலை வழங்கப்படுவதில்லை எனக் கூறி முழக்கங்களை எழுப்பினா். இதைத் தொடா்ந்து பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், போராட்டம் நடத்தக் கூடாது. மனுவாக அளிக்குமாறு கூறினா்.
இதையேற்க மறுத்த மாற்றுத் திறனாளிகள் அப்பகுதியில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். தொடா்ந்து விழுப்புரம் சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித் துணை ஆட்சியா் ஜெ.முகுந்தன், வட்டாட்சியா் கனிமொழி, ஊரக வளா்ச்சித் துறையின் உதவித் திட்ட அலுவலா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, தங்களுக்கு சரிவர வேலை வழங்குவதில்லை. அவ்வாறு வழங்கினால் மாதத்தில் 6 முதல் 8 நாள்கள் வரை மட்டுமே வேலை வழங்கப்படுகிறது.ஊதியமும் சரிவர வழங்கப்படுவதில்லை எனத் தெரிவித்தனா்.
குறைகளைக் கேட்டறிந்த அலுவலா்கள், இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா். இதையேற்றுக் கொண்ட மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.