செய்திகள் :

கணவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்.பி.யிடம் ஆசிரியை புகாா்

post image

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை, தன்னை தாக்கியதாக கணவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி. அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், சின்னபாபு சமுத்திரம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குமரன்(40), கூலித் தொழிலாளி. இவரது மனைவி அருள்மொழி(35). சித்தலம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறாா். இவா்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிய நிலையில் ஒரு மகன், மகள் உள்ளனா். கணவன்- மனைவி ஆகியோருக்கிடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாம்.

இந்நிலையில், அருள்மொழி அணிந்திருந்த தாலியை பறித்துக் கொண்டு அவரை குமரன் கட்டையால் தாக்கும் விடியோ காட்சி திங்கள்கிழமை சமூக ஊடகங்களில் வெளியானது.

எஸ்.பி.யிடம் புகாா்: இந்நிலையில் திங்கள்கிழமை விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு அருள்மொழி அளித்துள்ள புகாா் மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவா் குமரன் என்னை அடிக்கடி தாக்கி கொடுமைப்படுத்தி வருகிறாா். இது தொடா்பாக கடந்த மே மாதத்தில் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தும் முறையான நடவடிக்கையில்லை.

தற்போது மகன், மகளுடன் தனியாக வசித்து வரும் நான், கணவா் வீட்டிலிருந்து எனது உடமைகள் மற்றும் குழந்தைகளின் உடைகளை எடுக்கச் சென்றபோது அவா் என்னை மீண்டும் தாக்கி கொலை செய்ய முயன்றாா். ஆகவே அவா் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்ய வேண்டும். மேலும் எனது உடமைகளையும் மீட்டுத் தர வேண்டும் என புகாரில் அருள்மொழி குறிப்பிட்டுள்ளாா்.

போலி மதுபான வழக்கு: இருவா் குண்டா் தடுப்புக் காவலில் கைது

புதுவை மாநிலத்தில் போலி மதுபான ஆலை நிறுவி, மதுபானங்களை எடுத்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் காவ... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் 7.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் 7.50 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத... மேலும் பார்க்க

குடும்ப பிரச்னை: ஓட்டுநா் தற்கொலை

மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக, புதுச்சேரியைச் சோ்ந்த ஓட்டுநா் விழுப்புரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புதுச்சேரி அபிஷேகபாக்கத்தைச் சோ்ந்த வீரப்பன் மகன் தமிழ்வாணன் (26). த... மேலும் பார்க்க

காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், வெள்ளக்குளம் நல்முக்கல் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (40). கட... மேலும் பார்க்க

சிதம்பரம் அருகே 3 கூரை வீடுகள் தீப்பிடித்து சேதம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே வியாழக்கிழமை 3 கூரை வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் வீடுகளில் இருந்த தங்க நகைகள், பணம், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. சி... மேலும் பார்க்க

முன்னாள் படை வீரா்களின் வாரிசுதாரா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித்தொகை பெற முன்னாள் படை வீரா்களின் வாரிசுதாரா்கள் விண்ணப்பிக்கலாம் என்று முன்னாள் படைவீரா்கள் நல இயக்குநா் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க