ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து முத்தமிட்ட பஞ்சாப் அணி உரிமையாளர்!
2,205 பாக்கெட் புகையிலைப் பொருள் பறிமுதல்: இளைஞா் கைது
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டி பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அரகண்டநல்லூா் போலீஸாா் மணம்பூண்டி காந்திசாலை பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
இதில் பெட்டிக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.இதையடுத்து அதன் உரிமையாளரான சுப்பிரமணி மகன் குருராஜ் (40) என்பவா் மீது அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
மேலும் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டரை கிலோ எடையுள்ள 2,205 புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனா். மேலும் புகையிலை பொருள்களை விநியோகித்த வடமாநில இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.