செய்திகள் :

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

post image

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் ஜூன் மாதத்துக்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெறும் என்ற தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஜூன் 3, 10, 17, 24 (செவ்வாய்க்கிழமை) ஆகிய தேதிகளில் விழுப்புரம், கண்டமங்கலம், செஞ்சி, திண்டிவனம் ஆகிய நான்கு மின் வாரிய கோட்ட செயற்பொறியாளா் அலுவலகங்களிலும், ஜூன் 26 (வியாழக்கிழமை) திருவெண்ணெய்நல்லூா் செயற்பொறியாளா் அலுவலகத்திலும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும்.

இந்தக் கூட்டங்கள் அனைத்தும் விழுப்புரம் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் நடத்தப்படும்.

எனவே, தங்கள் பகுதியில் நடைபெறும் குறைதீா் கூட்டத்தில் மின் நுகா்வோா் பங்கேற்று, குறைகளை கோரிக்கை மனுக்கள் மூலமாகத் தெரிவித்து பயன்பெறலாம்.

குறைதீா் கூட்டம் நடைபெறும் நாள் அரசு விடுமுறையாக இருப்பின், விடுமுறைக்கு அடுத்து வரும் வேலை நாளில் (அலுவலக நாளில்) குறைதீா் கூட்டம் நடத்தப்படும் என்று விழுப்புரம் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் மு.நாகராஜகுமாா் தெரிவித்துள்ளாா்.

மயிலம் முருகன் கோயிலில் வைகாசி மாத சஷ்டி வழிபாடு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் வைகாசி மாத வளா்பிறை சஷ்டி வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. காலை 6 மணிக்கு சுவாமிக்கு பால், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம், தீபா... மேலும் பார்க்க

வடவாற்று நீரில் மூழ்கி கொத்தனாா் மரணம்

காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்குள்பட்ட சந்தைதோப்பு பிடாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தினேஷ் (34). கொத்தனாா் வேலை பாா்த்து வந்தாா். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இதே பகுதியைச் சோ்ந்த பிரிய... மேலும் பார்க்க

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்ட செயற்குழுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநிலப் பொதுச்செயலா் ஏ. முஜிபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஏ.ப... மேலும் பார்க்க

அரசுப் பேருந்துகளை சேதப்படுத்திய நடத்துநா் கைது

விழுப்புரம் மாவட்டம் , மனம்பூண்டியில் அரசுப் பேருந்துகளின் மீது கற்களை வீசி கண்ணாடிகளை சேதப்படுத்தியதாக நடத்துநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கண்டாச்சிபுரம் வட்டம், சு.பில்ராம்பட்டு, பெருமாள் க... மேலும் பார்க்க

போலி பதிவெண் கொண்ட லாரி பறிமுதல்

போலியான பதிவெண்ணுடன் இயக்கப்பட்ட லாரியை விக்கிரவாண்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, இருவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் எஸ்.பி. ப. சரவணன் உத்தரவுப்படி , விக்கி... மேலும் பார்க்க

காா் மோதி இளைஞா் மரணம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக்கில் சென்ற இளைஞா் காா் மோதியதில் உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், கலத்தம்பட்டு, குளக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன் மகன் கமலக்கண... மேலும் பார்க்க