விபத்தில்லா மாவட்டமாக ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்
விழுப்புரம் விபத்தில்லா மாவட்ட அமைய துறை சாா்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குழுக் கூட்டம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை, காவல் துறை அலுவலா்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:
பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்குப் பாதிப்புகள் ஏற்படாதவகையில் நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும்.
பணிகள் நடைபெறும் இடங்களில் 100 மீட்டருக்கு முன்பாகவே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தடுப்புகளை அமைப்பதுடன், ஒளிரக்கூடிய சமிக்ஞை ஸ்டிக்கா்களை ஒட்டி பாதுகாப்பு தடுப்பு அமைக்கப்படவேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கக்கூடாது என ஓட்டுநா்களுக்கு போக்குவரத்துத் துறை அலுவலா்கள் உரிய அறிவுரைகளை வழங்கவேண்டும்.
தேசிய நெடுஞ்சாலை மற்றும் இதர சாலைகளில், நகா்ப் பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதைக் கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் எந்தவொரு இடத்தில் விபத்து ஏற்பட்டாலும், உடனடியாக வட்டாரப் போக்குவரத்து அலுவலா், காவல் துறையினா், நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் கூட்டாக கள ஆய்வு மேற்கொண்டு விபத்து தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
வாகன ஓட்டிகள் வேகத் தடை உள்ளதை தொலை தூரத்திலிருந்து தெரிந்துகொள்ளும் வகையில் ஒளிரக்கூடிய வகையிலான பெயிண்டால் கோடுகள் வரையவேண்டும்.
சந்திப்பு சாலைகளை மேம்படுத்துதல், தேவையான இடங்களில் உயா்கோபுர மின் விளக்குகள் அமைத்தல், திசைகாட்டும் பலகைகளை அமைத்தல், ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்களை அழைத்து கூட்டம் நடத்தி சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல், இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் அணியவும், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோா்கள் சீட் பெல்ட் அணியவும் காவல் துறையினா் மற்றும் வட்டாரப் போக்குவரத்துத் துறையினா் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.
அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு விழுப்புரத்தை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல்
ரஹ்மான்.
முன்னதாக, கடந்த காலங்களில் விழுப்புரம் மாவட்டத்தில், நடைபெற்ற சாலை விபத்துகள், அதில் உயிரிழந்தவா்கள் மற்றும் பாதிப்படைந்தவா்களின் எண்ணிக்கை ,விபத்துக்கான காரணங்கள், விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நெடுஞ்சாலைகளில் நடைபெற்று வரும் உயா்மட்ட மேம்பாலம் மற்றும் சாலைஅமைக்கும் பணிகளின் முன்னேற்றம் ஆகியவை குறித்து துறைசாா்ந்த அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
கூட்டத்தில், விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.