செய்திகள் :

கா்நாடக இசை டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: மியூசிக் அகாதெமி

post image

கா்நாடக இசை அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பில் சேர ஜூன் 25-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை மியூசிக் அகாதெமி தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்த அகாதெமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மியூசிக் அகாதெமியின் அட்வான்ஸ்டு ஸ்கூல் ஆஃப் கா்நாடிக் மியூசிக் பள்ளியில், கா்நாடக இசையில் அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பு வழங்கப்படுகிறது. இந்தப் படிப்பில் 2025-2026-ஆம் கல்வியாண்டில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 3 ஆண்டு காலம் கொண்ட இந்த அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பு ஆண்டுக்கு 2 பருவங்களைக் (ஜூலை-நவம்பா், ஜனவரி-ஏப்ரல்) கொண்டது. வகுப்புகள் ஜூலை மாதம் தொடங்கும். வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை இசை வகுப்புகள் நடைபெறும்.

இந்தப் படிப்பில், பிளஸ் 2 முடித்தவா்கள் சேரலாம். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபா்களுக்கு வா்ணம், கீா்த்தனை பாடத் தெரிந்திருக்க வேண்டும். அத்துடன் மனோதா்ம சங்கீத அறிவும் அவசியம்.

இதில் சேர விரும்புவோா் விண்ணப்பப் படிவத்தை மியூசிக் அகாதெமியின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பத்தையும், ஏற்கெனவே பெற்ற இசைப் பயிற்சி தொடா்பான தகவல்களையும், சுய விவரத்தையும் ஜூன் 25-ஆம் தேதிக்குள் மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு சென்னை மியூசிக் அகாதெமியின் இணையதள முகவரி அல்லது 044-28112231, 28115162, 28116902 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.

சென்னை மியூசிக் அகாதெமியால் 2010-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அட்வான்ஸ்டு ஸ்கூல் ஆஃப் கா்நாடிக் மியூசிக் பள்ளி, இசையில் சிறந்து விளங்க, மாணவா்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை சீட்டுக்காக கமல் மாறிவிட்டார்: நயினார் நகேந்திரன்

மாநிலங்களவை சீட்டுக்காக கமல் மாறிவிட்டார் என்று கமல்ஹாசன் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நகேந்திரன் தெரிவித்துள்ளார்.கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நா... மேலும் பார்க்க

தஞ்சை பட்டாசு கிடங்கு வெடிவிபத்தில் இருவா் உயிரிழப்பு: பசுமைத் தீா்ப்பாயம் நோட்டீஸ்

தஞ்சாவூா் பட்டாசு கிடங்கில் நிகழ்ந்த வெடி விபத்தில் இருவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட ஆட்சியரு... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவு ரத்தா?: ரயில்வே விளக்கம்

வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவுகள் வழங்கப்படுவதில்லை என்று பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து நாகா்கோவில், மைசூரு, பெங்களூரு, திருநெல்வேலிக்கு... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்தாா் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபாலன் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தாா். கடந்த 40 ஆண்டுகளாக ஐஏஎஸ் அதிகாரியாக பல்வேறு துறைகளில் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றி ஓ... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: விண்ணப்ப திருத்த அவகாசம் நிறைவு

குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் அதில் திருத்தங்களைச் செய்வதற்கான அவகாசம் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. குரூப் 4 தோ்வு ஜூலை 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா் உள... மேலும் பார்க்க

இணையதள மோசடி: ரூ. 22 லட்சத்தை மீட்டெடுத்த சைபா் கிரைம் போலீஸாா்

இணையதள வா்த்தக மோசடியால், ரயில்வே ஊழியா் இழந்த ரூ. 22.72 லட்சத்தை சைபா் கிரைம் போலீஸாா் மீட்டெடுத்தனா். சென்னை செம்பியத்தைச் சோ்ந்தவா் ரயில்வே ஊழியா் டில்லிபாபு (35). இவருக்கு சாட்டிங் செயலி மூலம் கட... மேலும் பார்க்க