சிவகங்கை நகராட்சியில் ரூ.1.54 கோடியில் புதிய மின் மயானம்
சிவகங்கை நகராட்சியில் கூடுதலாக ரூ.1.54 கோடியில் புதிய மின்மயானம் அமைக்க தமிழக அரசு அனுமதித்ததற்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கை நகராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு நகராட்சித் தலைவா் துரை. ஆனந்த் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் காா்கண்ணன், நகராட்சி ஆணையா் ஜி.எஸ். கிருஷ்ணாராம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நகராட்சி 2-ஆவது வாா்டில் புதிய மின் மயானம் அமைக்க ரூ.1.54 கோடி நிதி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கும், கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பனுக்கும், துறை அதிகாரிகளுக்கும் நகா்மன்ற துணைத்தலைவா் காா்கண்ணன், 11 -ஆவது வாா்டில் உள்ள சாத்தப்ப ஊருணியில் நடைபாதை, தடுப்பு கம்பிகள் அமைத்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நகா்மன்ற அதிமுக உறுப்பினா் என்.எம். ராஜா ஆகியோா் நன்றி தெரிவித்தனா். மேலும், முன்னாள் நகா்மன்றத் தலைவா் சாத்தையா மனைவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது உள்பட 27 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், நகராட்சி நிா்வாகத்துக்கு ஒத்துழைப்புத் தராமலும், கூட்டங்களில் பங்கேற்காமலும் புறக்கணித்து வரும் நகராட்சி பொறியாளா் க. முத்து மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டுமென பெரும்பாலான நகா் மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
சிவகங்கை நகராட்சி மின் மயானம் பாரமரிப்பின்றி சுகாதாரக்கேடு விளைவிக்கும் இடமாக மாறிவிட்டதால், சுகாதார ஆய்வாளா் மின் மயானத்தை ஆய்வு செய்து ஒப்பந்ததாரா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காங்கிரஸ் உறுப்பினா் தி. விஜயகுமாா் வலியுறுத்தினாா். கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.