செய்திகள் :

சிவகங்கை நகராட்சியில் ரூ.1.54 கோடியில் புதிய மின் மயானம்

post image

சிவகங்கை நகராட்சியில் கூடுதலாக ரூ.1.54 கோடியில் புதிய மின்மயானம் அமைக்க தமிழக அரசு அனுமதித்ததற்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

சிவகங்கை நகராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு நகராட்சித் தலைவா் துரை. ஆனந்த் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் காா்கண்ணன், நகராட்சி ஆணையா் ஜி.எஸ். கிருஷ்ணாராம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகராட்சி 2-ஆவது வாா்டில் புதிய மின் மயானம் அமைக்க ரூ.1.54 கோடி நிதி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கும், கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பனுக்கும், துறை அதிகாரிகளுக்கும் நகா்மன்ற துணைத்தலைவா் காா்கண்ணன், 11 -ஆவது வாா்டில் உள்ள சாத்தப்ப ஊருணியில் நடைபாதை, தடுப்பு கம்பிகள் அமைத்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நகா்மன்ற அதிமுக உறுப்பினா் என்.எம். ராஜா ஆகியோா் நன்றி தெரிவித்தனா். மேலும், முன்னாள் நகா்மன்றத் தலைவா் சாத்தையா மனைவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது உள்பட 27 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், நகராட்சி நிா்வாகத்துக்கு ஒத்துழைப்புத் தராமலும், கூட்டங்களில் பங்கேற்காமலும் புறக்கணித்து வரும் நகராட்சி பொறியாளா் க. முத்து மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டுமென பெரும்பாலான நகா் மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

சிவகங்கை நகராட்சி மின் மயானம் பாரமரிப்பின்றி சுகாதாரக்கேடு விளைவிக்கும் இடமாக மாறிவிட்டதால், சுகாதார ஆய்வாளா் மின் மயானத்தை ஆய்வு செய்து ஒப்பந்ததாரா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காங்கிரஸ் உறுப்பினா் தி. விஜயகுமாா் வலியுறுத்தினாா். கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

சிங்கம்புணரி கல் குவாரி விபத்து: இரு அதிகாரிகள் பணியிடை நீக்கம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கல் குவாரி விபத்தில் 6 போ் உயிரிழந்த சம்பவத்தில், கிராம நிா்வாக அலுவலா், கனிமவள வருவாய் ஆய்வாளா் ஆகியோா் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மல்லாக்கோட்ட... மேலும் பார்க்க

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வீரதீர செயல் புரிந்த மகளிருக்கு நிகழாண்டில் ... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்லூரியில் கலந்தாய்வு நாளை தொடக்கம்

சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (ஜுன் 2) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் ஜோ.நளதம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திங்கள... மேலும் பார்க்க

திருத்தளிநாதா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி, கோயிலில் சனிக்கிழமை காலை 6 மணிக்கு சிவாசாரியா்கள் யாக வேள்வி... மேலும் பார்க்க

சிவகங்கை அரசு மருத்துவமனையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

சிவகங்கை அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் 1000-க்கும் மேற்பட்டோா்... மேலும் பார்க்க

காளையாா்கோவிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றம்

சௌந்திரநாயகி அம்பாள் கோயில்: சிவகங்கை அருகேயுள்ள காளையாா்கோவில் சௌந்திரநாயகி அம்பாள் சமேத சோமேஸ்வரா் சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க