'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
தூத்துக்குடி காற்றாலை நிறுவனத்தில் திருட்டு: லாரி ஓட்டுநா் கைது
தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் காற்றாலை இறக்கைகளை சேமித்து வைக்கும் இடத்தில் காற்றாலை இறக்கையை ‘லாக்’ செய்யக்கூடிய இரும்பு பூட்டை திருடியதாக லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
காற்றாலை இறக்கைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரும் தனியாா் நிறுவனத்தினா், அவற்றை தூத்துக்குடி துறைமுகத்தின் 6ஆவது தளத்தில் சேமித்து வைத்திருந்தனா். அங்கு காற்றாலை இறக்கைளை லாக் செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய சுமாா் 20 கிலோ எடையிலான இரும்பு பூட்டு காணாமல் போனது தெரியவந்தது.
இது குறித்து தொ்மல்நகா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் மம்சாபுரத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் அருண் பாண்டியன் (24) இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.