செய்திகள் :

`ஒரு கை தட்டினால் ஓசை வராது’ - பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

post image

டெல்லியைச் சேர்ந்த 23 வயதான சமூக வலைதள பிரபலத்தின் மீது துணிக்கடை நடத்தும் பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.

ஆப்பிள் ஐபோன்

கடந்த, 2021ம் ஆண்டு சமூக வலைதளம் வாயிலாக, அறிமுகமான அந்த பிரபலத்திடம், தனது ஆடைகளை விளம்பரம் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும், அப்போது விளம்பரம் தயாரிக்க புது ஐபோன் வேண்டும் என அந்த பிரபலம் கேட்டதால் ஜம்முவில் உள்ள அதிகாரப்பூர்வ ஆப்பிள் ஸ்டோர் மூலமாக போனை வாங்கி கொடுத்ததாகவும், ஆனால் அந்த போனை பெற்றுக் கொண்ட அந்த நபர் அதை பயன்படுத்தாமல் அதை மீண்டும் கடையிலேயே கொடுத்து பணமாக பெற்றுள்ளதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தெரிந்தவுடன் சம்பந்தப்பட்ட பிரபலத்திடம் கேட்டபோது அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டதுடன் 20,000 ரூபாய் பணத்தையும் கொடுத்திருக்கிறார்.

அதன் பிறகு விளம்பரம் எடுக்க வேண்டும் என அந்த பெண்ணை அழைத்துச் சென்று உணவில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிறகு மருத்துவமனை அழைத்துச் செல்வதாக கூறி மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவரை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுவதாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தன்னை இவ்வாறு தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வருவதாகவும் அந்த புகாரின் அந்த பெண்மணி தெரிவித்து இருந்தார்.

டெல்லி உயர் நீதிமன்றம்

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த டெல்லி காவல்துறையின் சமூக வலைதள பிரபலத்தை கைது செய்தனர்.

கடந்த 9 மாதங்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் அவர் டெல்லி உயர் நீதிமன்றம் தனக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார், இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, டெல்லி காவல்துறையினருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

"எந்த அடிப்படையில் அந்த நபர் மீது பாலியல் வன்கொடுமை பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தீர்கள்?” என கேட்டனர். இது போன்ற பாலியல் விவகாரங்களில் ஒரு கை தட்டினால் மட்டும் ஓசை வராது, புகார் கொடுத்திருக்கும் அந்தப் பெண் ஒன்றும் சிறுமி கிடையாது 40 வயதானவர். அவர் இந்த நபருடன் அடிக்கடி வெளியே செல்வது அவரது கணவருக்கும் தெரிந்திருக்கிறது. அவராக விருப்பப்பட்டு அந்த நபருடன் சென்றிருக்கிறார் என்னும்போது எப்படி இதை பாலியல் வன்கொடுமையாக கருத முடியும்." எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட அந்த பிரபலத்தை உடனடியாக விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி அவருக்கு முறைப்படி ஜாமீன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் அந்த நபர் இனி அந்தப் பெண்மணியை தொடர்பு கொள்ள கூடாது என்றும் அவருக்கு வழங்கப்படும் ஜாமீனை தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்தனர்.

`குறைந்தபட்ச தண்டனை கொடுங்கன்னு ஞானசேகரன் கதறி அழுதார், ஆனா..!' - அரசு தரப்பு வழக்கறிஞர்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என இன்று(மே 28) நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இந்த நிலையில் தீர்ப்பு குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் மே... மேலும் பார்க்க

`கருணை காட்ட வேண்டும்’ எனக் கேட்ட ஞானசேகரன் - அண்ணா பல்கலை., மாணவி வழக்கின் தீர்ப்பு விவரங்கள்

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பல்கலைக்கழக மாணவி ஒருவர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் டிசம்பர் 24ம் தேதி புகார் அளித்தார்.... மேலும் பார்க்க

`அரிதிலும் அரிதான வழக்கு’ அண்ணா பல்கலை., பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி - நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி தெரிவித்த பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் எதிரான வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்துள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் க... மேலும் பார்க்க

ஆன்லைன் சூதாட்டம்: `மத்திய அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது’ - நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்

சூதாட்டத்துக்கு வித்திடும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பந்தய செயலிகளை தடை செய்வது மற்றும் ஒழுங்குபடுத்துவது தொடர்பான பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. இது தொடர்பாக மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனு... மேலும் பார்க்க

தாயார் இறந்த மறுநாளே சட்ட பணி; 11 வழக்குகளில் தீர்ப்பு கூறிவிட்டு ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் அபய் எஸ் ஓகா. கடந்த சில நாள்களுக்கு முன்பு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். 22 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றிய அபய் ஓகா பல முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்... மேலும் பார்க்க

குழந்தை தலையில் முட்டை உடைத்து டிக்டாக் வீடியோ - தாய்க்கு ரூ.1.7 லட்சம் அபராதம்! - ஏன் தெரியுமா?

ஸ்வீடனிலுள்ள ஹெல்சிங்போர்க்கை சேர்ந்த 24 வயது பெண்ணொருவர், தனது மகளுடன் இணைந்து ஆப்பிள் கேக் செய்த வீடியோவை 2023 ஆம் ஆண்டு டிக்டாக்கில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவால் மன உளைச்சலுக்கு உள்ளான பார்வை... மேலும் பார்க்க