செய்திகள் :

தாயார் இறந்த மறுநாளே சட்ட பணி; 11 வழக்குகளில் தீர்ப்பு கூறிவிட்டு ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி

post image

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் அபய் எஸ் ஓகா. கடந்த சில நாள்களுக்கு முன்பு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். 22 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றிய அபய் ஓகா பல முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கி இருக்கிறார். தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும் அமைச்சராகப் பதவியேற்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டபோது அமைச்சர் பதவி வேண்டுமா சிறை வேண்டுமா என்று நீதிபதி அபய் ஓகா கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதே போன்று ஜாமீன் கிடைத்தும் பிணை தொகை கட்டமுடியாமல் தொடர்ந்து சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் ஜாமீனில் வெளி வர தேவையான உத்தரவை நீதிபதி அபய் ஓகா பிறப்பித்தார். அதோடு அமலாக்கப் பிரிவு மற்றும் சி.பி.ஐ போன்ற விசாரணை ஏஜென்சிகளிடம் பொதுமக்களுக்காக நீதிபதி அபய் ஓகா பல முறை கேள்வி கேட்டு போராடி இருக்கிறார்.

காங்கிரஸ் எம்.பி இம்ரான் சமூக வலைதலைத்தில் தெரிவித்த கருத்துக்காக குஜராத் அரசு தொடர்ந்த வழக்கை நீதிபதி அபய் ஓகா ரத்து செய்து உத்தரவிட்டார். இது போன்று நீதிபதி அபய் ஓகா வழங்கிய தீர்ப்புகளை எண்ணிக்கொண்டே செல்ல முடியும். அப்படிப்பட்ட நீதிபதி பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முதல் நாள் அவரது தாயார் இறந்துவிட்டார். அவரது தாயார் மும்பை தானேயில் இறந்து போனார். உடனே அபய் ஓகா மும்பைக்கு விரைந்து சென்றார். மும்பையில் தனது தாயாருக்கு இறுதிச்சடங்குகளை செய்து விட்டு அன்று இரவே டெல்லிக்கு வந்தார்.

அவர் பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளில் பணிக்கு வந்திருந்தார். கடைசி நாளில் அபய் ஓகா 11 முக்கியமான வழக்குகளில் தீர்ப்பு கூறினார். அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றது குறித்து மூத்த அரசு வழக்கறிஞர் கே.வெங்கடரமணி கூறுகையில், ''நீதிபதி அபய் ஓகா வழக்கறிஞர்களை விட கூடுதலாக தன்னை தயார்படுத்திக்கொண்டு கோர்ட்டிற்கு வரக்கூடியவர்'' என்று தெரிவித்தார்.

குழந்தை தலையில் முட்டை உடைத்து டிக்டாக் வீடியோ - தாய்க்கு ரூ.1.7 லட்சம் அபராதம்! - ஏன் தெரியுமா?

ஸ்வீடனிலுள்ள ஹெல்சிங்போர்க்கை சேர்ந்த 24 வயது பெண்ணொருவர், தனது மகளுடன் இணைந்து ஆப்பிள் கேக் செய்த வீடியோவை 2023 ஆம் ஆண்டு டிக்டாக்கில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவால் மன உளைச்சலுக்கு உள்ளான பார்வை... மேலும் பார்க்க

Waqf Bill: `முஸ்லிம் மறுமை, இந்து மோட்சம், கிறிஸ்தவ அர்பணிப்பு, ஆகமொத்தம்..' - உச்ச நீதிமன்ற நீதிபதி

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீதான இடைக்காலத் தடை விதித்திருந்த உச்ச நீதிமன்றத்தில் இந்த சட்டத் திருத்தம் தொடர்பான வாதங்களை உச்ச நீதிமன்றம் கேட்டு வருகிறது. மூன்றாம் நாளான நேற்று தலைமை நீதிபதி பி.ஆர்.க... மேலும் பார்க்க

Tasmac : `அனைத்து வரம்புகளையும் மீறி விட்டீர்கள்’ - அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை

ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், டாஸ்மாக் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை, அதன் தலைமை அலுவலகத்தில் ரெய்டு நடத்தியதுடன், அதன் மூத்த... மேலும் பார்க்க

மாநில அரசின் 'துணைவேந்தர் நியமன' அதிகாரம்; சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக... மேலும் பார்க்க

``சிவில் நீதிபதி தேர்வு எழுத 3 ஆண்டுகள் வழக்கறிஞராக அனுபவம் வேண்டும்'' - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

நீதிபதிக்கான தேர்வுகள் எழுத மூன்றாண்டு வழக்கறிஞர் அனுபவம் கட்டாயம் தேவை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.``2002 ஆம் ஆண்டு உத்தரவுக்குப் பிறகு, புதிய சட்டப் பட்டதாரிகளை எந்த நடைமுறை அனுபவமும் இல்லா... மேலும் பார்க்க

நமக்குள்ளே...

பாலியல் வன்கொடுமை என்பதே கொடூரம்தான். கொடூரத்திலும் கொடூரம்... பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை. தற்போது இந்த வழக்கில், 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது, சட்டத்த... மேலும் பார்க்க