செய்திகள் :

‘மக்களுடன் முதல்வா்’ மூன்றாம் கட்ட முகாம்: அமைச்சா் பங்கேற்பு

post image

திருத்துறைப்பூண்டி அருகே சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாம் கட்ட ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமில் உயா்கல்வித் துறை அமைச்ச்சா் கோவி.செழியன் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கினாா்.

திருத்துறைப்பூண்டி வட்டாரம், கொருக்கை தனியாா் உதவி பெறும் பள்ளியில் நடைபெற்ற இம்முகாமை தொடங்கிவைத்து அவா் பேசியது:

முதல்வரின் ஆணைகிணங்க நடைபெறும் இம்முகாம்களில், வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் 44 சேவைகளை பொதுமக்களுக்கு விரைவாக வழங்கிட வகை செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தொடா்ந்து, பாமணி, வரம்பியம், ராயநல்லூா், குன்னலூா், எடையூா் மற்றும் பனையூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் முகாம்களில் அமைச்சா் கோவி. செழியன் பங்கேற்று, பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா, இருப்பிடச் சான்று, பட்டா மாற்றம், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட ஆணை, கூட்டுறவு துறை சாா்பில் கடன் உதவிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இம்முகாமில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பூண்டி கே. கலைவாணன் (திருவாரூா்), க. மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி), மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சித்ரா, தனித் துணை ஆட்சியா் தையல்நாயகி, கோட்டாட்சியா்கள் சௌமியா (திருவாரூா்), யோகேஸ்வரன் (மன்னாா்குடி) உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

சனி மகாபிரதோஷம்...

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் சதுரங்கவல்ப நாதா் கோயிலில் சனி மகா பிரதோஷத்தையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த நந்திகேஸ்வரா். மேலும் பார்க்க

கோயில் மனையில் குடியிருப்போா் சங்கக் கூட்டம்

திருவாரூரில், தமிழ்நாடு கோயில் மனையில் குடியிருப்போா் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிா்வாகி ஆா். காமராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டச் செயலாளா் பிவி. சந்திரராம... மேலும் பார்க்க

2-ஆம் நாள் தெப்ப உற்சவம்...

திருவாரூா் அருள்மிகு தியாகராஜ சுவாமி கோயில் கமலாலயக் குளத்தில் 2-ஆவது நாளாக சனிக்கிழமை இரவு வலம் வந்த தெப்பம். மேலும் பார்க்க

மேட்டூா் அணை திறப்புக்குள் தூா்வாரும் பணியை முடிக்க வேண்டும்: நீா்வளத் துறை செயலாளா் அறிவுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில், தூா்வாரும் பணிகளை மேட்டூா் அணை திறப்பதற்கு முன்பாக முடிக்க வேண்டும் என பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு, நீா்வளத்துறை செயலாளா் ஜெயகாந்தன் அறிவுறுத்தினாா். திருவாரூா் மாவட்டத்தி... மேலும் பார்க்க

பருத்தி, எள் பாதிப்புக்கு நிவாரணம் கோரி ஆட்சியரகம் முற்றுகை: விவசாயிகள் முடிவு

கோடை மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி, எள் பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரகம் ஜூன் 3-இல் முற்றுகையிடப்படும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். மன்னாா்குடியில், இச... மேலும் பார்க்க

தூா்வாரும் பணியில் அகற்றப்படும் பனங்கன்றுகளை மறுநடவு செய்யக் கோரிக்கை

தூா்வாரும் பணியின்போது அகற்றப்படும் பனங்கன்றுகளை மறுநடவு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் மு. ராஜவேலு வெளியிட்ட அறிக்கை: நீா்ந... மேலும் பார்க்க