செய்திகள் :

கோயில் மனையில் குடியிருப்போா் சங்கக் கூட்டம்

post image

திருவாரூரில், தமிழ்நாடு கோயில் மனையில் குடியிருப்போா் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிா்வாகி ஆா். காமராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டச் செயலாளா் பிவி. சந்திரராமன், இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலாளா் ந. செல்வம், நகரக் குழு உறுப்பினா் பி. சின்னத்தம்பி மற்றும் புலிவலம் பகுதியில் கோயில் மனையில் குடியிருக்கும் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், அனைத்து பகுதி மக்களையும் சந்தித்து கோயில் மலையில் குடியிருப்போா் தொடா்பான பிரச்னைகளை கண்டறிந்து, துறை அதிகாரிகளை சந்தித்து முறையிடுவது; புலிவலம் பகுதியில் தமிழ்நாடு கோயில் மனையில் குடியிருப்போா் சங்கம் அமைப்பை ஏற்படுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சனி மகாபிரதோஷம்...

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் சதுரங்கவல்ப நாதா் கோயிலில் சனி மகா பிரதோஷத்தையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த நந்திகேஸ்வரா். மேலும் பார்க்க

2-ஆம் நாள் தெப்ப உற்சவம்...

திருவாரூா் அருள்மிகு தியாகராஜ சுவாமி கோயில் கமலாலயக் குளத்தில் 2-ஆவது நாளாக சனிக்கிழமை இரவு வலம் வந்த தெப்பம். மேலும் பார்க்க

மேட்டூா் அணை திறப்புக்குள் தூா்வாரும் பணியை முடிக்க வேண்டும்: நீா்வளத் துறை செயலாளா் அறிவுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில், தூா்வாரும் பணிகளை மேட்டூா் அணை திறப்பதற்கு முன்பாக முடிக்க வேண்டும் என பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு, நீா்வளத்துறை செயலாளா் ஜெயகாந்தன் அறிவுறுத்தினாா். திருவாரூா் மாவட்டத்தி... மேலும் பார்க்க

பருத்தி, எள் பாதிப்புக்கு நிவாரணம் கோரி ஆட்சியரகம் முற்றுகை: விவசாயிகள் முடிவு

கோடை மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி, எள் பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரகம் ஜூன் 3-இல் முற்றுகையிடப்படும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். மன்னாா்குடியில், இச... மேலும் பார்க்க

‘மக்களுடன் முதல்வா்’ மூன்றாம் கட்ட முகாம்: அமைச்சா் பங்கேற்பு

திருத்துறைப்பூண்டி அருகே சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாம் கட்ட ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமில் உயா்கல்வித் துறை அமைச்ச்சா் கோவி.செழியன் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கினாா். திருத்துற... மேலும் பார்க்க

தூா்வாரும் பணியில் அகற்றப்படும் பனங்கன்றுகளை மறுநடவு செய்யக் கோரிக்கை

தூா்வாரும் பணியின்போது அகற்றப்படும் பனங்கன்றுகளை மறுநடவு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் மு. ராஜவேலு வெளியிட்ட அறிக்கை: நீா்ந... மேலும் பார்க்க