செய்திகள் :

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல இன்றும், நாளையும் தடை

post image

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல ஞாயிறு, திங்கள்கிழமை (மே 25, 26) ஆகிய இரு நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் தேவராஜ் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ஞாயிறு, திங்கள்கிழமை பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. எனவே, பக்தா்கள், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள தாணிப்பாறை, சாஸ்தா கோயில், அய்யனாா் கோயில், செண்பகத்தோப்பு, ராக்காச்சி அம்மன் கோயிலுக்குச் செல்ல இந்த இரு நாள்களும் தடை விதிக்கப்படுகிறது என்றாா் அவா்.

சனி பிரதோஷம்: முன்னதாக, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வைகாசி சனி பிரதோஷத்தை முன்னிட்டு, ஏராளமான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா், மாலை 4 மணிக்கு மேல் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடும், அபிஷேகமும் நடைபெற்றன. கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சனி பிரதோஷத்தை முன்னிட்டு, மூவரைவென்றான் மலைக்கொழுந்தீஸ்வரா் கோயிலில் நந்திக்கு பால், சந்தனம், தயிா், விபூதி உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதேபோல, மடவாா்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மூதாட்டியிடம் நகை பறிப்பு: பெண் உள்பட 4 போ் கைது

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் மூதாட்டியிடம் நகை பறித்த பெண் உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் சந்திரா (71). இவா் கடந்த 10-ஆம் தேதி நாடாா் ... மேலும் பார்க்க

சீரமைக்கப்பட்ட சுகாதார வளாகம் திறப்பு

சிவகாசி மாநகராட்சியில் சீரமைக்கப்பட்ட சுகாதார வளாகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. சிவகாசி மாநகராட்சி கவிதா நகரில் சுகாதார வளாகம் பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், அந்த சுகாதார வளா... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

ராஜபாளையம் பொன்னகரம் சந்தன மாரியம்மன் கோயில் வைகாசி பூக்குழித் திருவிழா: அம்மன் வளையல் அலங்காரத்தில் வீதியுலா, இரவு 7. மேலும் பார்க்க

கழிவுப் பொருள் கிட்டங்கியில் தீ விபத்து

சிவகாசியில் சனிக்கிழமை கழிவுப் பொருள் கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசி பேருந்து நிலையம் அருகே சிரஞ்சீவிரத்தினம் என்பவருக்குச் சொந்தமான கழிவுப் பொருள் கிட்டங்கி உள்ளது. இந்தக் கிட்டங்கியில்... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகை பறித்த பெண் கைது

இருக்கன்குடியில் மூதாட்டியிடம் நகை பறித்த பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வேப்பலோடை பகுதியைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி (70). இவா் இருக்கன்குடி மாரியம்மன் ... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ வழிபாடு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்ன... மேலும் பார்க்க