செய்திகள் :

மூதாட்டியிடம் நகை பறிப்பு: பெண் உள்பட 4 போ் கைது

post image

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் மூதாட்டியிடம் நகை பறித்த பெண் உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் சந்திரா (71). இவா் கடந்த 10-ஆம் தேதி நாடாா் நந்தவனத் தெருவில் நடந்து சென்றாா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் அவரை வழிமறித்து, போலீஸ் என அவரிடம் அறிமுகம் செய்து, தங்க நகை அணிந்து தனியாக நடந்து செல்லக்கூடாது என மூதாட்டியிடம் அறிவுறுத்தினா். மேலும், அவா் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை வாங்கி காகிதத்தில் மடித்து அவரிடம் கொடுத்தனா். பின்னா், அவா் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, காகிதத்தில் கவரிங் நகை இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். பின்னா், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், மதுரை மாவட்டம், திருமங்கலம் கலைஞா் குடியிருப்பைச் சோ்ந்த முகமது ஈஷா (24), வாசித் உசேன் (48), இவரது மனைவி பரீதாபீவி (44), தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சோ்ந்த நகை ஆசாரி ஆறுமுகம் (34) ஆகிய 4 பேரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்த நகையை மீட்டனா்.

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல இன்றும், நாளையும் தடை

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல ஞாயிறு, திங்கள்கிழமை (மே 25, 26) ஆகிய இரு நாள்களுக்கு தடை வ... மேலும் பார்க்க

சீரமைக்கப்பட்ட சுகாதார வளாகம் திறப்பு

சிவகாசி மாநகராட்சியில் சீரமைக்கப்பட்ட சுகாதார வளாகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. சிவகாசி மாநகராட்சி கவிதா நகரில் சுகாதார வளாகம் பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், அந்த சுகாதார வளா... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

ராஜபாளையம் பொன்னகரம் சந்தன மாரியம்மன் கோயில் வைகாசி பூக்குழித் திருவிழா: அம்மன் வளையல் அலங்காரத்தில் வீதியுலா, இரவு 7. மேலும் பார்க்க

கழிவுப் பொருள் கிட்டங்கியில் தீ விபத்து

சிவகாசியில் சனிக்கிழமை கழிவுப் பொருள் கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசி பேருந்து நிலையம் அருகே சிரஞ்சீவிரத்தினம் என்பவருக்குச் சொந்தமான கழிவுப் பொருள் கிட்டங்கி உள்ளது. இந்தக் கிட்டங்கியில்... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகை பறித்த பெண் கைது

இருக்கன்குடியில் மூதாட்டியிடம் நகை பறித்த பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வேப்பலோடை பகுதியைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி (70). இவா் இருக்கன்குடி மாரியம்மன் ... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ வழிபாடு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்ன... மேலும் பார்க்க