செய்திகள் :

நீதி ஆயோக் ‘தகுதியற்ற அமைப்பு’: காங்கிரஸ்

post image

நீதி ஆயோக் என்பது தகுதியற்ற அமைப்பாகும் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை சாடினாா்.

இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: வளா்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடைவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காகப் பிரதமா் மோடி தலைமையில் நீதி ஆயோக் கூட்டம் கூடுவதாக கூறப்படுகிறது.

அதிகாரத்தில் உள்ளவா்கள் தங்கள் தீய இலக்குகளை எட்டுவதற்கு நாடாளுமன்றம், நீதித்துறை, பல்கலைக்கழகங்கள், ஊடகம், அரசமைப்பு மற்றும் சட்டபூா்வ அமைப்புகளை சீா்குலைத்தால், அது எப்படிப்பட்ட வளா்ச்சியடைந்த பாரதமாக இருக்கும்?

ஒரு சிலரின் கைகளில் மட்டுமே செல்வம் தொடா்ந்து குவிந்தும், பொருளாதர ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்தும் வரும் நிலையில், வளா்ச்சியடைந்த பாரதம் எப்படிப்பட்டதாக இருக்கும்?

நீதி ஆயோக் என்பது தகுதியற்ற அமைப்பாகும். பிரதமா் மோடி தலைமையிலான நீதி ஆயோக் கூட்டம் மத்திய அரசின் பாசாங்கான, நாட்டு பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பும் மற்றொரு முயற்சியாகும் என்றாா்.

‘இந்தியாவின் வளா்ச்சிக்கான கூட்டம்’: நீதி ஆயோக் கூட்டம் தொடா்பாக பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் சையத் ஷாநவாஸ் ஹுசைன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘நீதி ஆயோக் கூட்டம் என்பது நாட்டின் வளா்ச்சிக்கான கூட்டமாகும். ஆனால் இதிலும் ஜெய்ராம் ரமேஷ் தவறு கண்டுபிடிக்கிறாா்.

ஏதோ ஒரு சா்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு கூட்டும் அனைத்துக் கூட்டங்களிலும் அவா் தவறு கண்டுபிடித்து வருகிறாா். காங்கிரஸ் கட்சிக்கு அவரே முடிவு கட்டிவிடுவாா்’ என்றாா்.

ம.பி.யில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண் பலி

மத்திய பிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேசம் மாநிலத்தில் கான்ட்வா மாவட்டத்தில் இருந்து 90 கி.மீ தொலைவில், வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

தாணேவில் 21 வயது இளைஞர் கரோனாவுக்கு பலி

தாணேவில் 21 வயது இளைஞர் கரோனாவுக்கு பலியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்ப்ராவைச் சேர்ந்த 21 வயது நபர் மே 22ஆம் தேதி தாணேயில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் கால்வா மருத்து... மேலும் பார்க்க

அமெரிக்கா: பாகிஸ்தான் எதிர்விளைவைப் பெறும்! சசி தரூர் எச்சரிக்கை!

பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தான் தகுந்த எதிர்விளைவைப் பெறும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்தார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலையடுத்த... மேலும் பார்க்க

தெலங்கானா: உலக அழகிப் போட்டியில் விலைமாது, குரங்கைப்போல உணர்ந்ததாக இங்கிலாந்து அழகி குற்றச்சாட்டு!

தெலங்கானாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியில் கண்ணியக் குறைவாக நடத்தப்படுவதாக இங்கிலாந்து அழகி மில்லா மேகி குற்றம் சாட்டியுள்ளார்.தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாதில் 72 ஆவது உலக அழகிப் போட்டி (Miss Worl... மேலும் பார்க்க

பெங்களூரு: கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழப்பு? மருத்துவர்கள் மறுப்பு!

பெங்களூரில் கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழந்ததாகப் பரவிய வதந்திக்கு மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.பெங்களூரில் 84 வயதான முதியவர் ஒருவர், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மே 13 ஆம் தேதியில் தனியா... மேலும் பார்க்க

தில்லியில் கனமழை! 100 விமான சேவைகள் பாதிப்பு!

தில்லியில் கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.தில்லியில் இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தில்லியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித... மேலும் பார்க்க