செய்திகள் :

Ooty: தொடர் கனமழை; ஊட்டியில் மூடப்படும் சுற்றுலாத்தலங்கள், தயார் நிலையில் மீட்பு முகாம்கள்!

post image

நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழைக்கான‌ ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு முதல் காற்றுடன் கூடிய தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, குடலூர் , பந்தலூர் என பரவலாக மழைப்பொழிவு காணப்படுகிறது.

சாலையில் விழுந்த மரம்

இன்றும் நாளையும் மிதமிஞ்சிய அளவில் மழைப்பொழிவு இருக்கலாம் என ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை நிலவரப்படி மாவட்டம் முழுவதும் பரவலாக 1,378.4 மில்லிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அதிக பட்சமாக அவலாஞ்சியில் 215 மில்லிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியிருக்கிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பேரிடர் அபாயகரமான 283 பகுதிகள் கண்டறியப்பட்டு , அந்த பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக தொட்டபெட்டா காட்சி முனை, ஊட்டி படகு இல்லம், லேம்ஸ் ராக், ஷீட்டிங் மட்டம், பைக்காரா உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்குச் செல்ல பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொட்டபெட்டா

இன்றும் காற்றுடன் கூடிய தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. மக்களை பாதுகாப்புடன் இருக்க தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். மழை பாதிப்புகள் குறித்து 1077 என்கிற இலவச எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`ரெட் அலர்ட், ஒரே நாளில் 2 பக்தர்கள் உயிரிழப்பு..' - வெள்ளியங்கிரி மலை ஏற தடை விதித்த வனத்துறை

தமிழ்நாட்டில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவ... மேலும் பார்க்க

Rain: கேரளாவில் தொடங்கிய பருவமழை; கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- வெளியான தகவல் என்ன?

கேரளாவில் 8 நாள்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழைத் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.இந்திய வானிலை மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “வழக்கமாக, தெ... மேலும் பார்க்க

ஈரோடு: விடிய விடிய கனமழை; சாலையில் பெருகி ஓடிய நீர் | Photo Album

ஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்... மேலும் பார்க்க

Rain Alert: 'புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி' - வானிலை ஆய்வு மையம் தகவல்

மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்திருக்கிறார்.செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய... மேலும் பார்க்க

Rain alert: 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்?

'அய்யய்யோ அக்னி நட்சத்திரம் கொளுத்திவிடுமே' என்ற பயத்தில் இருந்த தமிழ்நாட்டு மக்களுக்கு, மழை பெய்து கருணைக் காட்டி வருகிறது. கடந்த சில நாள்களாக, தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் 'ஜில்' என்று தான் காலை ... மேலும் பார்க்க

Rain: 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? - வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல் என்ன?

தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே, வெயில் வாட்டி வதைத்து வந்தது. தற்போது கோடை வெயில் தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அவ்வபோது மழை பெய்து வருகிறது. கடந்த 4 ஆம் தேதி அ... மேலும் பார்க்க