'8000 கிராமங்களில் பள்ளிகள் இல்லை' - வளர்ச்சியடைந்த மாநிலமான மகாராஷ்டிராவில் அவல...
Rain alert: 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்?
'அய்யய்யோ அக்னி நட்சத்திரம் கொளுத்திவிடுமே' என்ற பயத்தில் இருந்த தமிழ்நாட்டு மக்களுக்கு, மழை பெய்து கருணைக் காட்டி வருகிறது.
கடந்த சில நாள்களாக, தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் 'ஜில்' என்று தான் காலை விடுகிறது. அது இன்னும் கொஞ்சம் நாள்களுக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, நாளை சில மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, சேலம், கரூர், நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
மஞ்சள் அலர்ட் கன மழையை குறிக்கிறது. ஆக, நாளை மேலே குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின் படி, நாளை காலை 8.30 மணி வரை இந்த மாவட்டங்களில் மழை பெய்யலாம்.
இதற்கேற்ற மாதிரி பிளான் பண்ணிக்கோங்க மக்களே!