செய்திகள் :

Rain: கேரளாவில் தொடங்கிய பருவமழை; கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- வெளியான தகவல் என்ன?

post image

 கேரளாவில் 8 நாள்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழைத் தொடங்கியதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. 

இந்திய வானிலை மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “வழக்கமாக, தென்மேற்கு பருவமழை ஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தொடங்கி ஜூலை 8 ஆம் தேதி இந்தியா முழுவதும் பரவக்கூடும்.

rain
rain

இந்த முறை முன்கூட்டியே தொடங்குவதால் வரும் நாள்களில் கேரளா முழுவதும் மழை பெய்யும் வாய்ப்பு அதிகரிக்கும். கடந்த 16 ஆண்டுகளில், முன் கூட்டியே, தென்மேற்கு பருவமழை தொடங்குவது இதுவே முதல் முறை.

கேரளாவில் தொடங்கி நாடு முழுவதிலும் ஜூலை முதல் வாரத்தில் முழுமையாக பரவக்கூடும். நாட்டின் 80% மழைப் பொழிவு தென்மேற்கு பருவமழை காலத்தில் கிடைக்கிறது” என்று தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் (மே 25,26) ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. 20 செ.மீ மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது, என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Rain
Rain

தவிர தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 11- 20 செ.மீ மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அந்த மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

ஈரோடு: விடிய விடிய கனமழை; சாலையில் பெருகி ஓடிய நீர் | Photo Album

ஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்... மேலும் பார்க்க

Rain Alert: 'புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி' - வானிலை ஆய்வு மையம் தகவல்

மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்திருக்கிறார்.செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய... மேலும் பார்க்க

Rain alert: 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்?

'அய்யய்யோ அக்னி நட்சத்திரம் கொளுத்திவிடுமே' என்ற பயத்தில் இருந்த தமிழ்நாட்டு மக்களுக்கு, மழை பெய்து கருணைக் காட்டி வருகிறது. கடந்த சில நாள்களாக, தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் 'ஜில்' என்று தான் காலை ... மேலும் பார்க்க

Rain: 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? - வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல் என்ன?

தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே, வெயில் வாட்டி வதைத்து வந்தது. தற்போது கோடை வெயில் தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அவ்வபோது மழை பெய்து வருகிறது. கடந்த 4 ஆம் தேதி அ... மேலும் பார்க்க

ஊட்டி: 2 மணி நேரம் கொட்டிக் தீர்த்த கனமழை; வெள்ளத்தில் தத்தளித்த வாகனங்கள்!

நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாள்களாக ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகலில் கனமழை கொட்டித் தீர்த்து வருக... மேலும் பார்க்க

TN Rain: எந்தெந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு? - வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு என்ன?

தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.கடந்த சில தினங்களாக கோடை வெயில் அதிகரித்து மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருந... மேலும் பார்க்க