செய்திகள் :

மன உளைச்சலில் அன்புமணி! 2026 தேர்தல் வெற்றியில் பாமக?

post image

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான ராமதாஸுக்கும், அக்கட்சித் தலைவரான அன்புமணி ராமதாஸுக்கும் அண்மையில் கருத்து மோதல் இருந்து வந்தது. இந்த நிலையில், நிறுவனர் ராமதாஸின் வழியில் செல்லவிருப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் பாமக கட்சிக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது, ``என்ன தவறு செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை. கடந்த ஒருமாத காலமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். இன்றுவரையில் மருத்துவர் ராமதாஸ் சொல்வதைத்தான் கேட்டு வந்தேன். இனியும் ஒரு மகனாகவும், கட்சித் தலைவராகவும் அவர் சொல்வதைத்தான் கேட்பேன்.

அவரின் கனவை நிறைவேற்ற தொடர்ந்து செயல்படுவேன். அதைத்தவிர வேறு என்ன இருக்கிறது. எங்கள் குடும்பப் பிரச்னையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அதில் மற்றவர்களின் தலையீடு தேவையில்லை.

கேரளத்தில் தனிப்பெரும் சமுதாயமான ஈழவர் சமுதாயத்துக்கு 14 விழுக்காடு இடஒதுக்கீடு உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் தனிப்பெரும் சமுதாயமான வன்னியர் சமுதாயத்துக்கு எதுவும் இல்லை.

தமிழக காவல்துறையில் 109 உயர் அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே வன்னியர். இதுதான் சமூக நீதியா? 10 சதவிகிதம், 12 சதவிகிதம் வந்துவிட்டதாக அரசு பொய் கூறிவருகிறது. 20 சதவிகிதத்தில் ஒரு சதவிகிதம் மட்டுமே நமக்கு கிடைக்கிறது.

தமிழகத்தில் பாமக ஆட்சி வெகுதொலைவில் இல்லை. ஆட்சியை எப்படி பிடிக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்’’ என்று தெரிவித்தார்.

தமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமர் பரிசீலிப்பார்: முதல்வர் நம்பிக்கை

தமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி பரிசீலிப்பார் என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி தலைமையில் நீதி ஆயோக் கூட்டம் தில்லி பாரத் மண்டபத்தில் இன்று(மே 24) நடைபெற்றத... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் அதிகரிக்கும் லாக்-அப் மரணங்கள்! நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் காவல்துறை அத்துமீறி செயல்படுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.தமிழகத்தில் சமீபகாலமாக லாக்-அப் மரணங்கள் அதிகளவில் ஏற்படுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இதுக... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையம்: 3 மாதங்களில் ரூ. 1 கோடிக்கு அதிகமான கடத்தல் பொருள்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 3 மாதங்களில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான கடத்தல் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சென்னை விமான நிலையத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் கேட்பாரற்றுக் கிடந்த உடைமைகளில் இரு... மேலும் பார்க்க

நகைக் கடன் புதிய விதிகளை திரும்பப் பெற வேண்டும்: விஜய்

நகைக்கடன் புதிய வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஏழை, நடுத்தர மக்களின் ஆபத்பாந்தவனாக வி... மேலும் பார்க்க

பிரதமர் மோடியிடம் பேசியது என்ன? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்திற்கான பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் முன்வைத்துள்ளார்.பிரதமர் மோடி தலைமையில் நீதி ஆயோக் கூட்டம் தில்லி பாரத் மண்டபத்தில் இன்று(மே 24) நடைபெற்றது. இதில் முதல்வர... மேலும் பார்க்க

சொத்துவரி விவகாரம்: இபிஎஸ்-க்கு அமைச்சர் கே.என் நேரு பதில்

சொத்துவரி உயர்வு விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘’ஓலைக் குடிசைகள், ஓட்டு ... மேலும் பார்க்க