செய்திகள் :

பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் தலைமறைவு!

post image

பிரபல பாலிவுட் நடிகர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டுள்ளது.

தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் பிரபலமடைந்த பாலிவுட் நடிகரான அஜாஸ் கான் பிக்பாஸ் - 7 நிகழ்ச்சியில் பங்குபெற்று கவனம் ஈர்த்தார். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் இவர் மீது நடிகை ஒருவர், அஜாஸ் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறையிடம் புகார் அளித்தார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட மும்பை காவல்துறையினர் அஜாஸ் கானைத் தொடர்புகொள்ள முயற்சித்தனர்.

அதற்குள் தன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டதால் மும்பை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி அஜாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், வழக்கின் தீவிரம் கருதி நீதிபதி ஜாமீன் மனுவை நிராகரித்துள்ளார். இதற்கிடையே, அஜாஸ் கான் தலைமறைவாகிட்டாராம். தற்போது, மும்பை காவல்துறை அஜாஸ் கானைத் தேடும் பணிகளில் இறங்கியுள்ளனர்.

அண்மை காலமாக பாலிவுட் திரைத்துறையினர் பாலியல் வழக்குகளில் சிக்குவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஸ்பிரிட் படத்தில் அனிமல் பிரபலம்!

ஸ்பிரிட் படத்தில் அனிமல் பிரபலம்!

அனிமல் படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகை திரிப்தி திம்ரி ஸ்பிரிட் படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அர்ஜுன் ரெட்டி, அனிமல் படங்களின் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்... மேலும் பார்க்க

குபேரா அப்டேட்!

குபேரா படத்திற்கான புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கி வருகிறார். இதில் நாகர்ஜுனா பிரதான பாத்திரத்திலும் நாயகியாக ராஷ்மிகாவும் நடிக்கின்றனர்.பான் இந்தியப் படம... மேலும் பார்க்க

ஆகாஷ் பாஸ்கரனால் பராசக்தி படப்பிடிப்பு பாதிக்கப்படுமா?

இயக்குநர் சுதா கொங்காரா, சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் பராசக்தி படத்தின் நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி, மதராஸி ஆகிய படங்களில் ந... மேலும் பார்க்க

உடல் எடை குறைப்பில் ரவி மோகன்!

நடிகர் ரவி மோகன் உடல் எடை குறைப்பில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதற்கான முயற்சியில் உள்ளார். இதற்காக, இருவரும் அடிக்கடி அறிக்கை வெள... மேலும் பார்க்க

சனி பிரதோஷம்: தஞ்சை பெரிய கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

சனி பிரதோஷத்தை முன்னிட்டு உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் பெரு நந்திக்கு நடைபெற்ற அபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாட... மேலும் பார்க்க

‘மோசம்..’ ஷங்கர் மீது கேம் சேஞ்சர் எடிட்டர் குற்றச்சாட்டு!

இயக்குநர் ஷங்கருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து கேம் சேஞ்சர் படத்தின் எடிட்டர் பேசியுள்ளார். இந்தியாவிலும் பிரம்மாண்ட படங்கள் எடுக்கப்படுகின்றன என உலகிற்குக் காட்டிய இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். ஜெண்... மேலும் பார்க்க