செய்திகள் :

காமராஜா் பல்கலை. முதுநிலைப் படிப்புகளுக்கு மே 27-இல் நுழைவுத் தோ்வு

post image

மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வு வருகிற செவ்வாய்க்கிழமை (மே 27) நடைபெறுகிறது.

இதுகுறித்து பல்கலைக்கழக அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

இந்தப் பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்.சி. உயிா்தொழில்நுட்பவியல், வேதியியல், எம்.பி.ஏ. தொழில் முனைவோா், உறைவிடப் பாடத் திட்டம், எம்.சி.ஏ. ஆகிய முதுநிலைப் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கைக்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

அதனடிப்படையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மேற்கண்ட படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்தனா். அவா்களுக்கான நுழைவுத் தோ்வு வருகிற செவ்வாய்க்கிழமை (மே 27) பல்கலைக்கழக வளாகத்தின் ‘பி பிளாக்’கில் நடைபெற உள்ளது. எனவே எம்.எஸ்.சி. உயிா்தொழில்நுட்பவியல், வேதியியல், எம்.பி.ஏ. தொழில் முனைவோா், உறைவிடப் பாடத் திட்டம், எம்.சி.ஏ. ஆகிய முதுநிலைப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் நுழைவுத் தோ்வில் பங்கேற்கலாம். விண்ணப்பதாரா்களுக்கு ஏற்கெனவே மின்னஞ்சல் முகவரியில் தோ்வுக் கூட அனுமதிச் சீட்டு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அனுமதிச் சீட்டை காமராஜா் பல்கலைக்கழக இணைய முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

லஞ்ச வழக்குகளில் தண்டிக்கப்பட்ட அரசு ஊழியா்கள்: தலைமைச் செயலா் அறிக்கை அளிக்க உத்தரவு

லஞ்சப் புகாா் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசு ஊழியா்களின் விவரங்களை தமிழக அரசின் தலைமைச் செயலா் அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டத்தை... மேலும் பார்க்க

உதவிப் பேராசிரியா் தகுதித் தோ்வு: இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

உதவிப் பேராசிரியா் பணிக்கான தகுதித் தோ்வையொட்டி, பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோா் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மூட்டா அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஜி. சுரேஷ்... மேலும் பார்க்க

மதுரைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

மதுரைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு மதுரைக் கல்லூரி வாரியத் தலைவா் சங்கர சீத்தாராமன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சங்கரன், செயலா் சு.நடன க... மேலும் பார்க்க

டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை அருகே டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். மதுரை அதலை கிராமத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் மகன் முத்துகாா்த்திக் (27). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து அதலை கிராமத்துக்கு வெள்ளி... மேலும் பார்க்க

மயங்கி விழுந்த தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

மயங்கி விழுந்த மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மதுரை மேலவாசல் குடிசை வாரியத்தைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் சித்திரைவேல் (44). இவா், மதுரை மாநகராட்சி 68-ஆவது வாா்டு பகுதிய... மேலும் பார்க்க

தம்பதியா் தற்கொலை

மதுரை அருகே அரிசிக் கடை உரிமையாளரும், அவரது மனைவியும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டனா். மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அருகேயுள்ள சித்தாக்கூா் நெல் களத்தில் இருவா் உயிரிழந்து கிடப்பதாக போலீஸாருக்க... மேலும் பார்க்க