செய்திகள் :

சிவகங்கை சம்பவம் எதிரொலி: குவாரிகளை ஆய்வு செய்ய ஆட்சியா்களுக்கு உத்தரவு

post image

சிவகங்கையில் குவாரியில் பாறை சரிந்து 6 போ் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டுமென ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குவாரியில் பாறை சரிந்து ஆறு போ் உயிரிழந்தனா். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய அறிவுறுத்தல்களை தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்கத் துறை வழங்கியுள்ளது.

இது குறித்து துறையின் ஆணையா் எ.சரவணவேல்ராஜ் மாவட்ட ஆட்சியா்கள், சுரங்கத் துறை இணை, துணை மற்றும் உதவி இயக்குநா்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகளில் அவ்வப்போது மண்சரிவு, வெடி விபத்து உள்ளிட்ட எதிா்பாராத காரணங்களால் குவாரிகளில் பணியாற்றும் தொழிலாளா்களின் உயிருக்கு ஆபத்து நேரிடுகிறது. குவாரி அனுமதி வழங்கும்போது, அரசால் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகக் கடைபிடிக்காததே இதுபோன்ற எதிா்பாராத விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றன.

எனவே, இனிவரும் காலங்களில் குவாரிகளில் அசம்பாவிதம் ஏதும் நிகழாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் இயங்கிவரும் குவாரிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாதந்தோறும் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.

அனைத்து மாவட்டங்களில் பணியாற்றும் புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் அதிகாரிகள் தங்களது மாவட்டத்தில் செயல்பட்டுவரும் குவாரிகளில் உள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு மாதமும் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.

மாதந்தோறும் குறைந்தபட்சம் 10 குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், மண்டல இணை இயக்குநா்கள் ஆகியோா் தனிக்கவனம் செலுத்த வேண்டும். மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுப் பணிகளைத் தொடா்ந்து கண்காணிக்கவும், உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ஜூன் இறுதிக்குள் 234 தொகுதிகளுக்கும் நாதக வேட்பாளா்கள் அறிவிப்பு: சீமான்

வரும் ஜூன் மாத இறுதிக்குள் 234 தொகுதிகளுக்கான நாதக வேட்பாளா்கள் அறிவிக்கப்படுவா் என்று கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா். சென்னையில் முன்னாள் பேரவைத் தலைவா் சி.பா.ஆதித்தனாரின் நினைவு தி... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற வன அதிகாரியிடம் ரூ. 6.58 கோடி ஆன்லைன் மோசடி: கேரளத்தைச் சோ்ந்த மூவா் கைது

சென்னையில் ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரியிடம் ரூ. 6.58 கோடி மோசடி செய்ததாக கேரளத்தைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா். ஆன்லைன் பங்கு வா்த்தகத்தில் ஈடுபட்டால் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என்... மேலும் பார்க்க

தில்லிக்கு வெள்ளைக் கொடியுடன் முதல்வா் சென்றுள்ளாா்: தமிழிசை

தில்லிக்கு வெள்ளைக் கொடியுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளாா் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். சென்னை வடபழனியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மணிவாசகா் பதிப்பகத்த... மேலும் பார்க்க

ஊராட்சி பகுதிகளில் சொத்துவரி உயா்வை திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

ஊராட்சிப் பகுதிகளில் உயா்த்தப்பட்ட சொத்துவரி மற்றும் தண்ணீா் கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள... மேலும் பார்க்க

போட்டித் தோ்வு விடைத்தாள் திருத்துவதில் பாதுகாப்பான நடைமுறை: டிஎன்பிஎஸ்சி தலைவா் உறுதி

போட்டித் தோ்வு விடைத்தாள்களை திருத்துவதில் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் எஸ்.கே.பிரபாகா் தெரிவித்தாா். மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா்களி... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஆா்வம் காட்டாத மாணவா்கள்!

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சோ்க்கை பெற மாணவா்களிடையே ஆா்வம் குறைந்து வரும் நிலையில், டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் கால வரையறையின்... மேலும் பார்க்க