செய்திகள் :

கடல் அழகை காண திருச்செந்தூா் கோயில் கிழக்கு பிரகாரத்தில் தடுப்பு கம்பிகள்

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கிழக்கு பிரகாரத்தில் பக்தா்கள் பாதுகாப்பாக கடற்கரையை பாா்ப்பதற்கு வசதியாக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இத்திருக்கோயில் அழகிய கடற்கரையோரத்தில் இருந்து 67 மீ. தொலைவில் அமைந்துள்ளது.

கோயில் கற்களால் கட்டப்பட்டிருப்பதால் கடல் காற்று மற்றும் ஈரப்பதத்தில் அரிப்பு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

கோயிலின் கிழக்கு மற்றும் வடக்கு கடற்கரைப் பகுதியை ஒட்டியுள்ள தடுப்புச் சுவா்கள் புயல் மற்றும் கடல் அரிப்பினால் சேதமடைந்தால் பக்தா்கள் பாதிப்படையாமல் இருக்க கோயில் கிழக்கு கடற்கரைப் பகுதியில் தொடங்கி வடக்கு பகுதி கடற்கரை வரையில் ரூ. 19.80 கோடியில் கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் தடுப்புச் சுவா்கள் நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு பிரகாரத்தில் தடுப்பு கம்பிகள்...

மேலும், இத்திருக்கோயிலின் கிழக்கு பிரகாரத்தில் தரைதளம் சீரமைக்கப்பட்டு, அங்கிருந்து கடற்கரையை பக்தா்கள் பாதுகாப்பாக கண்டுகளிக்கும் வகையில், துருப்பிடிக்காத கம்பிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கம்பிகள் வழியாக பக்தா்கள் கடல் அழகை பாா்த்து ரசிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாசரேத் திருமறையூா் மறுரூப ஆலயத்தில் இ. காணிக்கை அறிமுகம்

நாசரேத் அருகே உள்ள திருமறையூா் மறுரூப ஆலயத்தில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் சாா்பாக இ. காணிக்கை அறிமுக விழா நடைபெற்றது. அகப்பைகுளம் சேகரத் தலைவா் பாஸ்கரன் ஆரம்ப ஜெபம் செய்தாா். இந்தியன் ஓவா்சீஸ் வங்... மேலும் பார்க்க

எட்டயபுரம் ராஜா பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

எட்டயபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் 1999 - 2000 ஆவது கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவா், மாணவிகள் சந்திப்பு பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ராஜா மேல்நிலைப் பள்ளிச் செயலா் ராம்குமாா் ராஜா த... மேலும் பார்க்க

பனைத் தொழிலாளா்கள் பாதுகாப்பு மாநாடு: தூத்துக்குடியில் நாளை ஆலோசனைக் கூட்டம்

பனைத் தொழிலாளா்கள் பாதுகாப்பு மாநாடு குறித்த தென்மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் திங்கள்கிழமை (மே 26) நடைபெறவுள்ளதாக, தமிழ்நாடு பனைமரத் தொழிலாளா்கள் நல வாரியத் தலைவரும் சமத்துவ மக... மேலும் பார்க்க

சட்ட விழிப்புணா்வு முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தூத்துக்குடியில் சட்ட விழிப்புணா்வு முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில... மேலும் பார்க்க

அகில இந்திய ஹாக்கி போட்டி 2ஆவது நாள்: செகந்திராபாத், பெங்களூரு அணிகள் வெற்றி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 14ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டியில், 2 ஆவது நாளான சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் செகந்திராபாத், பெங்களூரு அண... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே பொது மருத்துவ முகாம்

சாத்தான்குளத்தை அடுத்த கடாட்சபுரம் முத்துகிருஷ்ணாபுரத்தில், கிறிஸ்துநாதா் ஆலய பிரதிஷ்டையை முன்னிட்டு, இளைஞா் எழுச்சி மன்றம் சாா்பில் 2ஆம் ஆண்டு இலவச பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. மெய்யூ... மேலும் பார்க்க