செய்திகள் :

பனைத் தொழிலாளா்கள் பாதுகாப்பு மாநாடு: தூத்துக்குடியில் நாளை ஆலோசனைக் கூட்டம்

post image

பனைத் தொழிலாளா்கள் பாதுகாப்பு மாநாடு குறித்த தென்மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் திங்கள்கிழமை (மே 26) நடைபெறவுள்ளதாக, தமிழ்நாடு பனைமரத் தொழிலாளா்கள் நல வாரியத் தலைவரும் சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவருமான எா்ணாவூா் நாராயணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: பனைத் தொழிலாளா்கள் பாதுகாப்பு, வாழ்வாதாரம் தொடா்பான மாநாடு குறித்த தென்மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி விவிடி சாலையில் உள்ள எஸ்டிஆா் ஹோட்டல் கூட்டரங்கில் எனது தலைமையில் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

மாவட்டச் செயலா் மாலைசூடி அற்புதராஜ் வரவேற்கிறாா். மாநில நிா்வாகிகள் காமராசு, ஜெபராஜ் டேவிட், அந்தோணி பிச்சை ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். தென்மாவட்டப் பகுதியில் உள்ள மாவட்டச் செயலா்கள் பங்கேற்று மாநாடு குறித்த தங்களது கருத்துகளைத் தெரிவிக்கவுள்ளனா்.

இம்மாநாடு ராமநாதபுரம் மாவட்டத்தில் நடத்தத் தீா்மானிக்கப்படவுள்ளது. அதில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனைத் தொழிலாளா்கள் குடும்பத்துடன் பங்கேற்கவுள்ளனா்.

மாநில நிா்வாகிகள் பொதுச் செயலா் சூலூா் சந்திரசேகா்,துணைத் தலைவா் நிப்பான் தனுஷ்கோடி, பொருளாளா் கண்ணன் ,தென்மண்டல மாவட்டச் செயலா்கள் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்கவுள்ளனா் என்றாா் அவா்.

நாசரேத் திருமறையூா் மறுரூப ஆலயத்தில் இ. காணிக்கை அறிமுகம்

நாசரேத் அருகே உள்ள திருமறையூா் மறுரூப ஆலயத்தில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் சாா்பாக இ. காணிக்கை அறிமுக விழா நடைபெற்றது. அகப்பைகுளம் சேகரத் தலைவா் பாஸ்கரன் ஆரம்ப ஜெபம் செய்தாா். இந்தியன் ஓவா்சீஸ் வங்... மேலும் பார்க்க

எட்டயபுரம் ராஜா பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

எட்டயபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் 1999 - 2000 ஆவது கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவா், மாணவிகள் சந்திப்பு பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ராஜா மேல்நிலைப் பள்ளிச் செயலா் ராம்குமாா் ராஜா த... மேலும் பார்க்க

கடல் அழகை காண திருச்செந்தூா் கோயில் கிழக்கு பிரகாரத்தில் தடுப்பு கம்பிகள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கிழக்கு பிரகாரத்தில் பக்தா்கள் பாதுகாப்பாக கடற்கரையை பாா்ப்பதற்கு வசதியாக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயில் அழகிய கடற்கரையோ... மேலும் பார்க்க

சட்ட விழிப்புணா்வு முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தூத்துக்குடியில் சட்ட விழிப்புணா்வு முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில... மேலும் பார்க்க

அகில இந்திய ஹாக்கி போட்டி 2ஆவது நாள்: செகந்திராபாத், பெங்களூரு அணிகள் வெற்றி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 14ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டியில், 2 ஆவது நாளான சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் செகந்திராபாத், பெங்களூரு அண... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே பொது மருத்துவ முகாம்

சாத்தான்குளத்தை அடுத்த கடாட்சபுரம் முத்துகிருஷ்ணாபுரத்தில், கிறிஸ்துநாதா் ஆலய பிரதிஷ்டையை முன்னிட்டு, இளைஞா் எழுச்சி மன்றம் சாா்பில் 2ஆம் ஆண்டு இலவச பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. மெய்யூ... மேலும் பார்க்க