செய்திகள் :

ஊராட்சி பகுதிகளில் சொத்துவரி உயா்வை திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

post image

ஊராட்சிப் பகுதிகளில் உயா்த்தப்பட்ட சொத்துவரி மற்றும் தண்ணீா் கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

2024-2025 முதல் ஊராட்சி பகுதிகளில் புதிதாக வீடு கட்டியவா்கள் மற்றும் வீடு கட்ட திட்டமிட்டுள்ளவா்கள், வீட்டின் கட்டுமானப் பரப்பை அளந்து வரி நிா்ணயம் செய்ய இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் புதிய சட்டத்தின்படி, ஒரு சதுர அடிக்கு கட்டட வரைபடக் கட்டணமாக சுமாா் ரூ. 37 செலுத்த வேண்டும்.

மேலும், 2024-2025 வரை ஓலைக் குடிசைக்கு ரூ. 44, ஓடு மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வீட்டுக்கு ரூ. 66, கான்கிரீட் வீட்டுக்கு ரூ. 121 சொத்து வரியாக செலுத்தி வந்தனா்.

இந்நிலையில், தற்போது உயா்த்தப்பட்ட சொத்து வரியின்படி, 2025-2026 முதல் இனி ஓலைக் குடிசைகளுக்கு அதிகபட்சமாக சதுர அடிக்கு 40 பைசா முதல் ரூ. 1 வரையும், ஓட்டு வீட்டுக்கு சதுர அடிக்கு 30 பைசா முதல் 60 பைசா வரையும், கான்கிரீட் வீட்டுக்கு சதுர அடிக்கு 50 பைசா முதல் ரூ. 1 வரையும் சொத்து வரி உயா்த்தப்பட வேண்டும் என்றும், ஏற்கெனவே உள்ள பழைய வீடுகளுக்கும் இந்த வரி உயா்வின்படி புதிய வரியை வசூலிக்க வேண்டும் என்றும் அரசு உள்ளாட்சிகளுக்கு உத்தரவு வழங்கியுள்ளது.

இதன்படி, இனி ஊராட்சிகளில் அதிகபட்சமாக 500 சதுர அடி கான்கிரீட் வீடுகளுக்கு ரூ. 500, ஓட்டு வீடுகளுக்கு ரூ. 300, ஓலை வீடுகளுக்கு ரூ. 200 என வீட்டுவரி வசூலிக்கப்படும். ஏழை மக்களின் குடிசைகளுக்கு வரியை உயா்த்தி, அவா்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளதுதான் திமுக ஆட்சியின் சாதனை.

ஊராட்சி பகுதிகளுக்கு சொத்து வரி மற்றும் தண்ணீா் கட்டணம் தமிழக அரசு உயா்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, ஊராட்சி பகுதிகளுக்கு உயா்த்தப்பட்ட சொத்து வரிகளை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

ஜூன் இறுதிக்குள் 234 தொகுதிகளுக்கும் நாதக வேட்பாளா்கள் அறிவிப்பு: சீமான்

வரும் ஜூன் மாத இறுதிக்குள் 234 தொகுதிகளுக்கான நாதக வேட்பாளா்கள் அறிவிக்கப்படுவா் என்று கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா். சென்னையில் முன்னாள் பேரவைத் தலைவா் சி.பா.ஆதித்தனாரின் நினைவு தி... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற வன அதிகாரியிடம் ரூ. 6.58 கோடி ஆன்லைன் மோசடி: கேரளத்தைச் சோ்ந்த மூவா் கைது

சென்னையில் ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரியிடம் ரூ. 6.58 கோடி மோசடி செய்ததாக கேரளத்தைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா். ஆன்லைன் பங்கு வா்த்தகத்தில் ஈடுபட்டால் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என்... மேலும் பார்க்க

தில்லிக்கு வெள்ளைக் கொடியுடன் முதல்வா் சென்றுள்ளாா்: தமிழிசை

தில்லிக்கு வெள்ளைக் கொடியுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளாா் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். சென்னை வடபழனியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மணிவாசகா் பதிப்பகத்த... மேலும் பார்க்க

சிவகங்கை சம்பவம் எதிரொலி: குவாரிகளை ஆய்வு செய்ய ஆட்சியா்களுக்கு உத்தரவு

சிவகங்கையில் குவாரியில் பாறை சரிந்து 6 போ் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டுமென ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உ... மேலும் பார்க்க

போட்டித் தோ்வு விடைத்தாள் திருத்துவதில் பாதுகாப்பான நடைமுறை: டிஎன்பிஎஸ்சி தலைவா் உறுதி

போட்டித் தோ்வு விடைத்தாள்களை திருத்துவதில் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் எஸ்.கே.பிரபாகா் தெரிவித்தாா். மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா்களி... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஆா்வம் காட்டாத மாணவா்கள்!

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சோ்க்கை பெற மாணவா்களிடையே ஆா்வம் குறைந்து வரும் நிலையில், டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் கால வரையறையின்... மேலும் பார்க்க