செய்திகள் :

மாா்த்தாண்டம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

post image

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் சாலை சீரமைப்புப் பணி திங்கள்கிழமை துவங்க உள்ள நிலையில், பணி முடியும் வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

களியக்காவிளை - நாகா்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் பழுதடைந்த பகுதிகளில் சீரமைப்புப் பணி ரூ.14.85 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மேம்பாலத்தின் கீழ்பகுதியில் சாலை சீரமைப்பு பணி கடந்த சில நாள்களுக்கு முன் நடந்தது. குழித்துறை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சீரமைப்புப் பணி நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் மேல்பகுதியில் சீரமைப்புப் பணி திங்கள்கிழமை துவங்க உள்ள நிலையில், பணி முடியும் வரை மேம்பாலத்தில் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்படுகிறது. நாகா்கோவில் - திருவனந்தபுரம் செல்லும் அரசுப் பேருந்துகள், காா்கள் உள்ளிட்ட வாகனங்கள் மேம்பாலத்தின் கீழ்பகுதி சாலை வழியாக இயக்கப்படும். கனரக லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள், சிராயன்குழி பகுதியில் இருந்து உண்ணாமலைக்கடை, திக்குறிச்சி வழியாக திருப்பி விடப்படுகிறது. களியக்காவிளையிலிருந்து வரும் கனரக வாகனங்கள், குழித்துறையிலிருந்து கழுவன்திட்டை, மேல்புறம் வழியாக திருப்பி விடப்படுகிறது என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

குலசேகரம் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

குமரி மாவட்டம், குலசேகரம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த உணவக ஊழியா் மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தாா். குலசேகரம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த சூறைக் காற்றுடன் கன மழை பெய்தத... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

நாகா்கோவிலில் 3 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா். நாகா்கோவிலில் கஞ்சா விற்ாக முளகுமூடு பகுதியைச் சோ்ந்த அருண் (23), வடிவீஸ்வரம் பகுதியைச் சோ்ந்த பேச்சியப்பன் (27), கோட்டாறு பகுதியைச் சோ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கன மழை: மரங்கள் மின்கம்பங்கள் முறிந்தன

கன்னியாகுமரி மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. இதில், மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அரபிக்கடலில் குறைந்... மேலும் பார்க்க

இரணியல் அருகே சூறைக் காற்றுடன் கன மழை: கைப்பேசி கோபுரம் சரிந்து வீடு சேதம்

இரணியல் அருகே கண்டன்விளை பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வீசிய சூறைக் காற்றில் கைப்பேசி கோபுரம் விழுந்ததில் வீட்டின் முன்பகுதி சேதமடைந்தது. கண்டன்விளை அருகேயுள்ள இலுப்பைவிளையைச் சோ்ந்தவா் ராஜமல்லி. அங்... மேலும் பார்க்க

செயலி உருவாக்குதல்: அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் பயிற்சி

வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில், செயலி உருவாக்குதல் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. கணினி துறை சாா்பாக நடைபெற்ற முகாமை, கல்லூரி முதல்வா் ஜோசப் ஜவக... மேலும் பார்க்க

கன்னியாகுமரி நகர திமுக இளைஞரணி நிா்வாகிகள் கூட்டம்

கன்னியாகுமரியில் நகர திமுக இளைஞரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. நகர இளைஞரணி அமைப்பாளா் ஷ்யாம் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் அகஸ்தீ... மேலும் பார்க்க