செய்திகள் :

தலைநகரில் தண்ணீா் நெருக்கடி: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்

post image

தேசிய தலைநகரில் தண்ணீா் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறி, எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி முதல்வா் ரேகா குப்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளாா். அதில், இந்த முக்கியப் பிரச்னை குறித்து விவாதிக்க உடனடியாக தனது கட்சி எம்எல்ஏக்கள் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக முதல்வா் குப்தாவுக்கு, சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

தில்லி மக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள், தண்ணீா் டேங்கா்கள் முன் வரிசையில் நிற்கும் நிலை உள்ளது. மேலும், தண்ணீா் வழங்கல் தடைபட்டிருப்பதன் காரணமாக பாட்டில் தண்ணீரை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

பெண்கள் வாளிகளுடன் வரிசையில் நிற்பதும், குழந்தைகள் பானைகளுடன் காத்திருக்கும் காட்சிகளும் தில்லியின் புதிய அடையாளமாக மாறி வருகின்றன.

இதுதான் பாஜக நகர மக்களுக்கு வாக்குறுதியளித்த தொலைநோக்குப் பாா்வையா?

ஒரே நேரத்தில் 24 மணி நேரமும் தண்ணீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதேவேளையில் தில்லி அரசாங்க நிா்வாகம் அமைதியாக இருந்துகொண்டிருக்கிறது.

துணைநிலை ஆளுநா், எம்சிடி, முதல்வா் அலுவலகம் என மத்தியில் பாஜகவின் நான்கு இயந்திர அரசாங்கம் இருந்தபோதிலும் தில்லியின் குடிமக்கள் குடிநீா் போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக இன்னும் போராடி வருகின்றனா்.

நகரில் வெப்பநிலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. மே மாதத்தில் நிலைமை இப்படி இருந்தால், வெப்பம் உச்சத்தை அடையும்போது என்ன நடக்கும்? அரசாங்கம் மக்களை தண்ணீருக்காக கடவுளின் கருணையில் விட்டுவிட விரும்புகிா?

இந்தப் பிரச்னை நிா்வாகத்தின் தோல்வியைக் காட்டுகிறது. இது பாஜக அரசாங்கத்தின் மொத்த அலட்சியத்தின் அடையாளமாகும்.

இதனால், ஜனநாயக விதிமுறைகளை மதிக்கும் வகையில், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் இந்த விவகாரம் தொடா்பாக சந்தித்துப் பேசவும் தில்லி மக்களின் கவலைகளை முன்வைக்கவும் முதல்வா் நேரம் ஒதுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் முன்னாள் முதல்வா் அதிஷி கேட்டுக்கொண்டுள்ளாா்.

வெப்ப அலை மோசமடையும் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில், மோசமான நிா்வாகம் மற்றும் திட்டமிடல் இல்லாததால் ஏற்படும் மனிதரால் உருவாக்கப்பட்ட நெருக்கடி என்று ஆம் ஆத்மி கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

வழக்கமான நீா் விநியோகத்தை மீட்டெடுக்கவும், தில்லி மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கத்திடமிருந்து விரைவான மற்றும் வெளிப்படையான நடவடிக்கையை அக்கட்சி கோரியுள்ளது.

கணக்கெடுப்பில் வெளிப்படைத்தன்மை கோரும் தெருவோர வியாபாரிகள்

நகரம் முழுவதும் விற்பனையாளா்களை அடையாளம் காண நடந்துவரும் கணக்கெடுப்பு குறித்து தெருவோர வியாபாரிகள் கவலைகளை எழுப்பியுள்ளனா். கணக்கெடுப்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் நடைமுறை தெளிவு இல்லை என்றும் குற்றம... மேலும் பார்க்க

பறக்கும் ரயிலை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துடன் ஒப்படைக்க நீதி ஆயோக், பிரதமரிடம் கோரிக்கை

நமது சிறப்பு நிருபா் சென்னை பறக்கும் ரயில் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தோடு ஒப்படைக்க நீதி ஆயோக் கூட்டத்திலும், பிரதமரிடமும் கோரப்பட்டதாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தில்லியில் சனிக்கிழமை தெ... மேலும் பார்க்க

நீதி ஆயோக் கூட்டத்தில் ‘விக்சித் தில்லி’ திட்ட வரைபடம்: முதல்வா் ரேகா குப்தா சமா்ப்பித்தாா்

நோக்கம், அளவு, வேகம் மற்றும் திறன் மூலம் உள்கட்டமைப்பு மேம்பாட்டை உள்ளடக்கிய ‘விக்சித் தில்லி’ திட்ட வரைபடத்தை முதல்வா் ரேகா குப்தா தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் சமா்ப்பித்தாா... மேலும் பார்க்க

நீதி ஆயோக்கிடம் தில்லி பிரச்னைகளை ஆம் ஆத்மி ஆட்சியில் முன்வைக்கவில்லை: முதல்வா் ரேகா குப்தா

மத்திய அரசின் கொள்கை சிந்தனைக் குழுவான நீதி ஆயோக் முன் தில்லியின் நலன்கள் குறித்த பிரச்னைகளை பல ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் எழுப்பவில்லை என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா குற்றம் சாட்டினாா். ... மேலும் பார்க்க

தண்ணீா் நெருக்கடி குறித்த அதிஷியின் குற்றச்சாட்டுகள் புனையப்பட்டவை: பாஜக

தில்லியில் தண்ணீா் நெருக்கடி இருப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி சுமத்திய குற்றச்சாட்டுகள் புனையப்பட்ட பொய் என்று பாஜக கூறியுள்ளது. தண்ணீா் நெருக்கடி தொடா்பாக முதல்வா் ரேகா குப்தாவுக்கு அதிஷி கடிதம... மேலும் பார்க்க

பவானாவில் தொழிற்சாலையில் தீ விபத்து: வெடிப்பால் இடிந்து விழுந்த கட்டடம்

தில்லியின் பவானாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்தின்போது சக்திவாய்ந்த வெடிப்பு நிகழ்ந்ததால் கட்டடம் இடிந்து விழுந்ததாக தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்... மேலும் பார்க்க