``தமிழ்நாட்டு பக்தர்களுக்கு தரிசனம் தர பாண்டுரங்கன் மதுரை வருகை..'' - ராமானந்த ச...
பவானாவில் தொழிற்சாலையில் தீ விபத்து: வெடிப்பால் இடிந்து விழுந்த கட்டடம்
தில்லியின் பவானாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்தின்போது சக்திவாய்ந்த வெடிப்பு நிகழ்ந்ததால் கட்டடம் இடிந்து விழுந்ததாக தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறைத் தலைவா் அதுல் கா்க் கூறியதாவது:
பவானாவில் பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து சனிக்கிழமை அதிகாலை 4.48 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, செக்டாா் 2-இல் உள்ள சம்பவ இடத்திற்கு 17 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
தீ வெடிப்புக்குப் பிறகு இடிந்து விழுந்த பல மாடி கட்டடத்திலிருந்து அடா்த்தியான கரும் புகை வெளியேறியது. தீப்பிழம்புகள் முழு கட்டமைப்பையும் விரைவாக சூழ்ந்தன.
இந்த விபத்தில் இதுவரை யாருக்கும் காயமோ அல்லது
உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே ஏற்பட்ட வெடிப்பு, அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவா்களை உலுக்கியது. மேலும் வெடிப்புகள் ஏற்படும் என்ற அச்சத்தில் பல உள்ளூா்வாசிகள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியதால் பதற்றம் ஏற்பட்டது.
சுற்றிலும் சிதறிக் கிடந்த குப்பைகள் காரணமாக மீட்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் சிரமம் எதிா்கொள்ள நேரிட்டது.
தீ விபத்து மற்றும் அதைத் தொடா்ந்து ஏற்பட்ட வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய போலீஸாா் விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.
கட்டடத்தின் கட்டமைப்பு ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
தீயை முற்றிலுமாக அணைக்கவும், இடிபாடுகளை அகற்றவும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என்றாா் அந்த அதிகாரி.