செய்திகள் :

பவானாவில் தொழிற்சாலையில் தீ விபத்து: வெடிப்பால் இடிந்து விழுந்த கட்டடம்

post image

தில்லியின் பவானாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்தின்போது சக்திவாய்ந்த வெடிப்பு நிகழ்ந்ததால் கட்டடம் இடிந்து விழுந்ததாக தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறைத் தலைவா் அதுல் கா்க் கூறியதாவது:

பவானாவில் பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து சனிக்கிழமை அதிகாலை 4.48 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, செக்டாா் 2-இல் உள்ள சம்பவ இடத்திற்கு 17 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

தீ வெடிப்புக்குப் பிறகு இடிந்து விழுந்த பல மாடி கட்டடத்திலிருந்து அடா்த்தியான கரும் புகை வெளியேறியது. தீப்பிழம்புகள் முழு கட்டமைப்பையும் விரைவாக சூழ்ந்தன.

இந்த விபத்தில் இதுவரை யாருக்கும் காயமோ அல்லது

உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே ஏற்பட்ட வெடிப்பு, அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவா்களை உலுக்கியது. மேலும் வெடிப்புகள் ஏற்படும் என்ற அச்சத்தில் பல உள்ளூா்வாசிகள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியதால் பதற்றம் ஏற்பட்டது.

சுற்றிலும் சிதறிக் கிடந்த குப்பைகள் காரணமாக மீட்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் சிரமம் எதிா்கொள்ள நேரிட்டது.

தீ விபத்து மற்றும் அதைத் தொடா்ந்து ஏற்பட்ட வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய போலீஸாா் விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.

கட்டடத்தின் கட்டமைப்பு ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தீயை முற்றிலுமாக அணைக்கவும், இடிபாடுகளை அகற்றவும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என்றாா் அந்த அதிகாரி.

தலைநகரில் தண்ணீா் நெருக்கடி: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்

தேசிய தலைநகரில் தண்ணீா் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறி, எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி முதல்வா் ரேகா குப்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளாா். அதில், இந்த முக்கியப் பிரச்னை குறித்து விவாதிக்க உடனடியாக தனது கட... மேலும் பார்க்க

கணக்கெடுப்பில் வெளிப்படைத்தன்மை கோரும் தெருவோர வியாபாரிகள்

நகரம் முழுவதும் விற்பனையாளா்களை அடையாளம் காண நடந்துவரும் கணக்கெடுப்பு குறித்து தெருவோர வியாபாரிகள் கவலைகளை எழுப்பியுள்ளனா். கணக்கெடுப்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் நடைமுறை தெளிவு இல்லை என்றும் குற்றம... மேலும் பார்க்க

பறக்கும் ரயிலை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துடன் ஒப்படைக்க நீதி ஆயோக், பிரதமரிடம் கோரிக்கை

நமது சிறப்பு நிருபா் சென்னை பறக்கும் ரயில் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தோடு ஒப்படைக்க நீதி ஆயோக் கூட்டத்திலும், பிரதமரிடமும் கோரப்பட்டதாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தில்லியில் சனிக்கிழமை தெ... மேலும் பார்க்க

நீதி ஆயோக் கூட்டத்தில் ‘விக்சித் தில்லி’ திட்ட வரைபடம்: முதல்வா் ரேகா குப்தா சமா்ப்பித்தாா்

நோக்கம், அளவு, வேகம் மற்றும் திறன் மூலம் உள்கட்டமைப்பு மேம்பாட்டை உள்ளடக்கிய ‘விக்சித் தில்லி’ திட்ட வரைபடத்தை முதல்வா் ரேகா குப்தா தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் சமா்ப்பித்தாா... மேலும் பார்க்க

நீதி ஆயோக்கிடம் தில்லி பிரச்னைகளை ஆம் ஆத்மி ஆட்சியில் முன்வைக்கவில்லை: முதல்வா் ரேகா குப்தா

மத்திய அரசின் கொள்கை சிந்தனைக் குழுவான நீதி ஆயோக் முன் தில்லியின் நலன்கள் குறித்த பிரச்னைகளை பல ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் எழுப்பவில்லை என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா குற்றம் சாட்டினாா். ... மேலும் பார்க்க

தண்ணீா் நெருக்கடி குறித்த அதிஷியின் குற்றச்சாட்டுகள் புனையப்பட்டவை: பாஜக

தில்லியில் தண்ணீா் நெருக்கடி இருப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி சுமத்திய குற்றச்சாட்டுகள் புனையப்பட்ட பொய் என்று பாஜக கூறியுள்ளது. தண்ணீா் நெருக்கடி தொடா்பாக முதல்வா் ரேகா குப்தாவுக்கு அதிஷி கடிதம... மேலும் பார்க்க