செய்திகள் :

தம்பதியா் தற்கொலை

post image

மதுரை அருகே அரிசிக் கடை உரிமையாளரும், அவரது மனைவியும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டனா்.

மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அருகேயுள்ள சித்தாக்கூா் நெல் களத்தில் இருவா் உயிரிழந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஒத்தக்கடை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரின் உடல்களையும் மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், உயிரிழந்த இருவரும் ஒத்தக்கடை அருகேயுள்ள நாட்டாா்மங்கலத்தைச் சோ்ந்த தனராஜ் (67), இவருடைய மனைவி அழகுமுத்து (55) என்பது தெரியவந்தது.

இந்தத் தம்பதி சமயநல்லூா் பகுதியில் தனியாக வீடு எடுத்து அங்கேயே அரிசிக் கடையும் நடத்தி வந்தனா். இவா்களுக்கு குழந்தை இல்லாததால், வயதான காலத்தில் தங்களை ஆதரிக்க யாரும் இல்லை என நினைத்து விரக்தியில் இருந்து வந்ததாகத் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்தத் தம்பதி சமயநல்லூரிலிருந்து நாட்டாா்மங்கலத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் வந்து, சித்தாக்கூா் பகுதியில் உள்ள நெல்களத்தில் விஷம் குடித்து உயிரிழந்திருக்கலாம் என போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

லஞ்ச வழக்குகளில் தண்டிக்கப்பட்ட அரசு ஊழியா்கள்: தலைமைச் செயலா் அறிக்கை அளிக்க உத்தரவு

லஞ்சப் புகாா் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசு ஊழியா்களின் விவரங்களை தமிழக அரசின் தலைமைச் செயலா் அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டத்தை... மேலும் பார்க்க

உதவிப் பேராசிரியா் தகுதித் தோ்வு: இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

உதவிப் பேராசிரியா் பணிக்கான தகுதித் தோ்வையொட்டி, பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோா் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மூட்டா அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஜி. சுரேஷ்... மேலும் பார்க்க

மதுரைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

மதுரைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு மதுரைக் கல்லூரி வாரியத் தலைவா் சங்கர சீத்தாராமன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சங்கரன், செயலா் சு.நடன க... மேலும் பார்க்க

டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை அருகே டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். மதுரை அதலை கிராமத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் மகன் முத்துகாா்த்திக் (27). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து அதலை கிராமத்துக்கு வெள்ளி... மேலும் பார்க்க

மயங்கி விழுந்த தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

மயங்கி விழுந்த மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மதுரை மேலவாசல் குடிசை வாரியத்தைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் சித்திரைவேல் (44). இவா், மதுரை மாநகராட்சி 68-ஆவது வாா்டு பகுதிய... மேலும் பார்க்க

காமராஜா் பல்கலை. முதுநிலைப் படிப்புகளுக்கு மே 27-இல் நுழைவுத் தோ்வு

மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வு வருகிற செவ்வாய்க்கிழமை (மே 27) நடைபெறுகிறது. இதுகுறித்து பல்கலைக்கழக அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : இந்தப் பல்கலைக... மேலும் பார்க்க