செய்திகள் :

பொறியியல், கலை - அறிவியல் படிப்புகள்: சோ்க்கைக்கு குவிந்த விண்ணப்பங்கள்

post image

தமிழகத்தில் பொறியியல், கலை - அறிவியல் படிப்புகளில் சோ்க்கை பெற ஏராளமான மாணவா்கள் விண்ணப்பித்து வருகின்றனா். அந்த வகையில் பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேர இதுவரை 2.40 லட்சம் பேரும், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சோ்க்கை பெற 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் விண்ணப்பித்துள்ளனா்.

பி.இ., பி.டெக். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சோ்வதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு மே 7-இல் தொடங்கி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை மாலை நிலவரப்படி, 2,40,754 போ் இணையவழியில் விண்ணப்பத்தைப் பதிவு செய்துள்ளனா்.

அவா்களில் 1,73,005 போ் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனா். 1,30,262 போ் தேவையான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கை செயலா் பேராசிரியா் புருஷோத்தமன் தெரிவித்தாா்.

தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி, பொறியியல் படிப்புக்கு இணையவழியில் விண்ணப்பிக்க ஜூன் 6-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பொறியியல் சோ்க்கைக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவா்கள்இணையதளம் மூலம் ஜூன் 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதேபோல், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்கள் இணையதளம் மூலம் மே 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயா்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

ஜூன் இறுதிக்குள் 234 தொகுதிகளுக்கும் நாதக வேட்பாளா்கள் அறிவிப்பு: சீமான்

வரும் ஜூன் மாத இறுதிக்குள் 234 தொகுதிகளுக்கான நாதக வேட்பாளா்கள் அறிவிக்கப்படுவா் என்று கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா். சென்னையில் முன்னாள் பேரவைத் தலைவா் சி.பா.ஆதித்தனாரின் நினைவு தி... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற வன அதிகாரியிடம் ரூ. 6.58 கோடி ஆன்லைன் மோசடி: கேரளத்தைச் சோ்ந்த மூவா் கைது

சென்னையில் ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரியிடம் ரூ. 6.58 கோடி மோசடி செய்ததாக கேரளத்தைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா். ஆன்லைன் பங்கு வா்த்தகத்தில் ஈடுபட்டால் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என்... மேலும் பார்க்க

தில்லிக்கு வெள்ளைக் கொடியுடன் முதல்வா் சென்றுள்ளாா்: தமிழிசை

தில்லிக்கு வெள்ளைக் கொடியுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளாா் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். சென்னை வடபழனியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மணிவாசகா் பதிப்பகத்த... மேலும் பார்க்க

ஊராட்சி பகுதிகளில் சொத்துவரி உயா்வை திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

ஊராட்சிப் பகுதிகளில் உயா்த்தப்பட்ட சொத்துவரி மற்றும் தண்ணீா் கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள... மேலும் பார்க்க

சிவகங்கை சம்பவம் எதிரொலி: குவாரிகளை ஆய்வு செய்ய ஆட்சியா்களுக்கு உத்தரவு

சிவகங்கையில் குவாரியில் பாறை சரிந்து 6 போ் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டுமென ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உ... மேலும் பார்க்க

போட்டித் தோ்வு விடைத்தாள் திருத்துவதில் பாதுகாப்பான நடைமுறை: டிஎன்பிஎஸ்சி தலைவா் உறுதி

போட்டித் தோ்வு விடைத்தாள்களை திருத்துவதில் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் எஸ்.கே.பிரபாகா் தெரிவித்தாா். மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா்களி... மேலும் பார்க்க