செய்திகள் :

ரூ.25 லட்சம் பண மோசடி: சக வீராங்கனை மீது தீப்தி சர்மா புகார்!

post image

யுபி வாரியர்ஸ் அணி வீராங்கனை ஆருஷி கோயல் ரூ.25 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக, அணியின் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வீராங்கனையுமான தீப்தி சர்மா பரபரப்பு புகாரளித்துள்ளார்.

சமீபத்தில் முடிவடைந்த மகளிர் பிரீமியர் லீக்கில், தீப்தி சர்மா யுபி வாரியர்ஸ் அணியை வழிநடத்தினார். இந்தத் தொடரில் தீப்தி சர்மா 122 ரன்கள் மற்றும் எட்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இருப்பினும், 8 போட்டிகளில் விளையாடிய அவரது அணி 3 போட்டிகளில் மட்டும் வெற்றிபெற்று கடைசி இடத்தைப் பிடித்தது.

இந்த நிலையில், தீப்தி சர்மா தற்போது தனது சக வீராங்கனை மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தீப்தி சர்மாவிடம் ஆருஷி கோயல் ரூ.25 லட்சத்திற்கும் அதிகமாக மோசடி செய்ததாகவும், ஆக்ராவில் உள்ள தனது வீட்டில் இருந்து அருஷி கோயல் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பணம், நகைகள் மற்றும் வெளிநாட்டு பணத்தை திருடியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆக்ரா பிரிவில் இந்திய ரயில்வேயில் ஜூனியர் எழுத்தராக பணிபுரியும் அருஷி கோயல் உ.பி. வாரியர்ஸ் அணிக்காக ஒன்றாக விளையாடி வருகின்றனர். மேலும், ஆக்ரா கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்திலும் வேலை பார்த்து வருகிறார்.

ஆக்ராவில் உள்ள சதார் காவல் நிலையத்தில் தீப்தி சர்மாவின் சகோதரர் சுமித் சர்மா முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இந்தப் புகாரில் அருஷி கோயல் மீது திருட்டு, வீடு புகுந்து திருடுதல், நம்பிக்கை மோசடி மற்றும் அவமதிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டை அருஷி கோயல் முழுமையாக மறுத்துள்ளார்.

இதையும் படிக்க: இங்கிலாந்துக்கு எதிரான அனைத்துப் போட்டிகளிலும் பும்ரா விளையாட மாட்டார்: அஜித் அகர்கர்

ஆயுதப் படைப் பிரிவினருக்கு 6 மாதங்களுக்குள் பணிநிலை ஆய்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆயுதப் படைப் பிரிவினரின் பணிநிலை ஆய்வை ஆறு மாதங்களுக்குள் நடத்தி முடிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), இந்தோ திபெத்திய எல்லைப் படையினா் (ஐடிபிபி), ... மேலும் பார்க்க

மத துவேஷத்தை விதைக்கவே பஹல்காமில் தாக்குதல்: எஸ்.ஜெய்சங்கா் குற்றச்சாட்டு

அச்ச உணா்வை ஏற்படுத்தி மத துவேஷத்தை விதைக்கவே பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். ஜொ்மனி சென்ற அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டுத் தலைநகா் பொ்லினில் ஜெ... மேலும் பார்க்க

குடிமைப் பணித் தோ்வுக்கு கட்டாயமாகிறது ஆதாா் எண்!

குடிமைப் பணித் தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்போது ஆதாா் எண்ணை குறிப்பிடும் நடைமுறை கொண்டுவரப்பட இருப்பதாக மத்திய பணியாளா் தோ்வாணையத் தலைவா் (யுபிஎஸ்சி) தலைவா் அஜய்குமாா் தெரிவித்தாா். மாநில அ... மேலும் பார்க்க

சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு ஏன்? நாடாளுன்ற குழுவிடம் வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

இந்தியாவின் நல்லெண்ண முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தி வைத்ததற்கு பாகிஸ்தான்தான் காரணம் என்று நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்தது. பருவநி... மேலும் பார்க்க

ஜேஎன்யுவில் முதுநிலை, பட்டய படிப்புகளுக்கு சோ்க்கை தொடக்கம்

2025-26 கல்வியாண்டுக்கான முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் மேம்பட்ட பட்டயப் படிப்புகளுக்கான (ஏடிஓபி) சோ்க்கையை தில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) தொடங்கியுள்ளது. முதுநிலை க்யூட் (மத... மேலும் பார்க்க

ஜாா்க்கண்டில் மாவோயிஸ்ட் தலைவா் உள்பட இருவா் சுட்டுக் கொலை

ஜாா்க்கண்ட், லதேஹா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில், சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டுவந்த மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தளபதியான பப்பு லோஹரா உள்பட 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்... மேலும் பார்க்க