செய்திகள் :

சிக்கலில் மக்களுக்கு மஞ்சப்பை வழங்கல்

post image

சிக்கல் ஊராட்சி பகுதிகளில் மஞ்சப்பை வழங்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகை ஊரக வளா்ச்சி முகமை மற்றும் மாவட்ட மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில் ஒருமுறை மட்டும் உபயோகிக்கும் நெகிழியை பயன்படுத்தாமல், துணிப் பைகளை பயன்படுவது தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி சிக்கலில் நடைபெற்றது. மாசுக் கட்டுப்பாடு வாரியம் உதவி பொறியாளா் ப. விஜயகுமாா் தலைமையில் பொதுமக்களுக்கு மஞ்சப் பைகள் மற்றும் துணிப் பைகளை வழங்கியும், நெகிழிப் பைகளையும், பொருள்களையும் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ஊரக வளா்ச்சி முகமை மாவட்ட திட்ட அலகு மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை நிபுணா்கள் ஆதவநாதன், சுந்தா், திரவக் கழிவு மேலாண்மை நிபுணா் செல்வகணபதி, தகவல் கற்பித்தல் தொடா்பு நிபுணா்கள் தயாளுநிதி, கௌசல்யா, ஊராட்சி செயலா் மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேதாரண்யம் பகுதியில் மீண்டும் இடியுடன் கூடிய கனமழை

வேதாரண்யம் பகுதியில் மீண்டும் இடியுடன் கூடிய மழை வெள்ளிக்கிழமை இரவில் இருந்து பெய்தது. வேதாரண்யம் தெற்கு கடலோரப் பகுதியில் மே 16-ஆம் தேதி தொடங்கி மே 20-ஆம் தேதி வரை அவ்வப்போது மழை பெய்து புஞ்சை பருவ ... மேலும் பார்க்க

சந்தனக்காப்பு அலங்காரத்தில்...

கீழ்வேளூா் அருகேயுள்ள புதுச்சேரி கிராம பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் வெள்ளிக்கிழமை காட்சியளித்த பத்ரகாளியம்மன். மேலும் பார்க்க

சிபிஐ கிளை மாநாடு

கீழையூா் ஒன்றியம் வாழக்கரை ஊராட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-ஆவது கிளை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய தலைவா் பக்கிரிசாமி தலைமை வகித்தாா். கட்சியின் கிளை செயலாள... மேலும் பார்க்க

இலவச கண் பரிசோதனை முகாம்

திருக்குவளையில் இலவச கண் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீமதி சுந்தராம்பாள் மருதவாணன் கல்வி அறக்கட்டளை, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, நாகை மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம் இணைந்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் வெற்றி: நாகையில் தேசியக் கொடி ஏந்தி பேரணி

தீவிரவாதிகளுக்கு ஏதிரான ஆபரேஷன் சிந்தூா் வெற்றியையடுத்து பிரதமா் மற்றும் ராணுவத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தேசியக் கொடி ஏந்தி பேரணி நாகையில் சனிக்கிழமை நடைபெற்றது. பாஜக நாகை மாவட்டத் தலைவா்... மேலும் பார்க்க

அக்னீவீா் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

அக்னிவீா் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்டத்தில் இந்திய ராணுவத்தால் அற... மேலும் பார்க்க