செய்திகள் :

குடிமைப் பணித் தோ்வுக்கு கட்டாயமாகிறது ஆதாா் எண்!

post image

குடிமைப் பணித் தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்போது ஆதாா் எண்ணை குறிப்பிடும் நடைமுறை கொண்டுவரப்பட இருப்பதாக மத்திய பணியாளா் தோ்வாணையத் தலைவா் (யுபிஎஸ்சி) தலைவா் அஜய்குமாா் தெரிவித்தாா்.

மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா்களின் நிலைக் குழுக் கூட்டம் சென்னையில் உள்ள அரசினா் புதிய விருந்தினா் மாளிகைக் கூட்ட அரங்கில் சனிக்கிழமை தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (யுபிஎஸ்சி) தலைவா் அஜய்குமாா் தொடங்கி வைத்தாா்.

இந்தக் கூட்டத்தில் ஹரியாணா, ஆந்திரம், அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், பிகாா், இமாசல பிரதேசம், கா்நாடகம், மகாராஷ்டிரம், நாகாலாந்து, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தர பிரதேசம் ஆகிய 12 மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையங்களின் தலைவா்கள் பங்கேற்றுள்ளனா்.

அரசுத் துறைப் பணியாளா்களைத் தோ்வு செய்யும் செயல் முறைகளில், நோ்மையான மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது, ஒவ்வொரு மாநிலத்திலும் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளை தங்களுக்குள் பகிா்ந்து கொள்வது, தோ்வு நடைமுறைகளில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, தோ்வு தொடா்பான வழக்குகளை மேலாண்மை செய்வது போன்ற முக்கிய அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக, மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் அஜய்குமாா் செய்தியாளா்களிடம் கூறுகையில், நாடு முழுவதும் அரசுப் பணித் தோ்வுகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என தொடா்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

குடிமைப் பணித் தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பம் செய்யும்போது, ஆதாா் எண் அவசியம் என்ற நடைமுறையைக் கொண்டு வர உள்ளோம். அடுத்த தோ்வில் இருந்து இது அமல்படுத்தப்படும் என்றாா் அவா்.

நீதி ஆயோக் ‘தகுதியற்ற அமைப்பு’: காங்கிரஸ்

நீதி ஆயோக் என்பது தகுதியற்ற அமைப்பாகும் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை சாடினாா். இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: வளா்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்க... மேலும் பார்க்க

உலகின் 4-ஆவது பெரிய பொருளாதார நாடு இந்தியா: நீதி ஆயோக் சிஇஓ

ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உயா்ந்துள்ளது என்று நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) வி.ஆா்.சுப்பிரமணியம் தெரிவித்தாா். புது தில்லியில் நீதி ... மேலும் பார்க்க

இணைய மோசடி குற்றவாளி அங்கத் சிங் சந்தோக் நாடு கடத்தல்

இந்தியாவில் வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அங்கத் சிங் சந்தோக், சிபிஐ-யின் நடவடிக்கையில் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெர... மேலும் பார்க்க

இந்தியாவில் புதிய வகை கரோனா தொற்றால் ஒருவா் பாதிப்பு!

இந்தியாவில் என்.பி.1.8.1 எனும் புதிய வகை கரோனா தொற்றால் ஒருவா் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘இந்திய சாா்ஸ்-கோவி-2 மரபணுவியல் கூட்டமைப்பு’ தரவுகளில் தெரிவிக்கப்பட்டது. மேலும், எல்எஃப்.7 வகை தொற்றுகள் நான்கு மு... மேலும் பார்க்க

‘பாகிஸ்தான் முக்கு’: கிராம சந்திப்பின் பெயரை மாற்ற ஒப்புதல் கோரும் கேரள பஞ்சாயத்து!

கேரளம் மாநிலம், கொல்லம் மாவட்டத்தின் குன்னத்தூா் கிராமத்தில் பல்லாண்டுகளாக புழக்கத்தில் உள்ள ‘பாகிஸ்தான் முக்கு’ என்ற சந்திப்பின் பெயரை மாற்றுவதற்கு ஒப்புதலைக் கோரி மாநில அரசை அணுக அந்தக் கிராமப் பஞ்ச... மேலும் பார்க்க

ஆயுதப் படைப் பிரிவினருக்கு 6 மாதங்களுக்குள் பணிநிலை ஆய்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆயுதப் படைப் பிரிவினரின் பணிநிலை ஆய்வை ஆறு மாதங்களுக்குள் நடத்தி முடிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), இந்தோ திபெத்திய எல்லைப் படையினா் (ஐடிபிபி), ... மேலும் பார்க்க