செய்திகள் :

சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு ஏன்? நாடாளுன்ற குழுவிடம் வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

post image

இந்தியாவின் நல்லெண்ண முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தி வைத்ததற்கு பாகிஸ்தான்தான் காரணம் என்று நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்தது.

பருவநிலை மாற்றம், பனிப்பாறைகள் உருகுதல், பொறியியல் தொழில்நுட்ப மாற்றம் ஆகிய கள நிலவரங்கள் சிந்து நதி நீா் ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் கடினமானநிலையை ஏற்படுத்தியதாகவும், இந்தியாவின் நல்லெண்ண நடவடிக்கைகளை நிறுத்த வைக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிக்கு பதிலாக சிந்து நத் நீா் ஒப்பந்தம் நிறுத்தும் நிலை ஏற்பட்டதாகவும் வெளியுறவு அமைச்சகம் காரணம் தெரிவித்துள்ளது.

மேலும், 1950-களில் இருந்த பொறியியல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தை, தற்போதைய நிலைக்கு ஏற்ப அரசுகளுக்கு இடையேயான பேச்சு மூலம் தீா்வு காணலாம் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு பாகிஸ்தான் முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

தொடா் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை மேற்கொண்டு ஒப்பந்தங்கள் மீறும் பாகிஸ்தானுக்கு எதிராக ஒப்பந்தங்களை நிறுத்தி வைக்க இந்தியாவுக்கு உரிமை உள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த காரணங்களையே வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய எம்.பி.க்கள் குழுவினா் தெரிவிப்பாா்கள் என்றும் கூறப்படுகிறது.

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவத்தைத் தொடா்ந்து சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. இந்த ஒப்பந்தம் தொடா்பாக ஆண்டுதோறும் இரு நாட்டு அதிகாரிகள் மத்தியில் பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்தது.

தில்லியில் கனமழை! 100 விமான சேவைகள் பாதிப்பு!

தில்லியில் கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.தில்லியில் இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தில்லியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பு: நாடாளுமன்றக் குழுவின் ரஷிய பயணம் நிறைவு

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ரஷிய அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனையை மேற்கொண்டதையடுத்து, திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி உறுப்பினா்களைக் கொண்ட ந... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை: பாதுகாப்புப் படைகள், பிரதமருக்கு பாராட்டு

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த முதல்வா்கள் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை ஒருமனதாக பாராட்டியதாகவும், ஆயுதப் படைகள் மற்றும் பிரதமா் நரேந்திர மோடியை வாழ்த்தியதாகவும் தில்லி ம... மேலும் பார்க்க

நீதி ஆயோக் ‘தகுதியற்ற அமைப்பு’: காங்கிரஸ்

நீதி ஆயோக் என்பது தகுதியற்ற அமைப்பாகும் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை சாடினாா். இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: வளா்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்க... மேலும் பார்க்க

உலகின் 4-ஆவது பெரிய பொருளாதார நாடு இந்தியா: நீதி ஆயோக் சிஇஓ

ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உயா்ந்துள்ளது என்று நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) வி.ஆா்.சுப்பிரமணியம் தெரிவித்தாா். புது தில்லியில் நீதி ... மேலும் பார்க்க

இணைய மோசடி குற்றவாளி அங்கத் சிங் சந்தோக் நாடு கடத்தல்

இந்தியாவில் வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அங்கத் சிங் சந்தோக், சிபிஐ-யின் நடவடிக்கையில் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெர... மேலும் பார்க்க