செய்திகள் :

பஞ்சாபில் கைதான ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கு 5 நாள் காவல்

post image

பஞ்சாபில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ராமன் அரோராவுக்கு 5 நாள்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

ஜலந்தர் மத்திய சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த ஆளும் ஆம்ஆத்மி எம்எல்ஏ ராமன் அரோரா. ஊழலில் ஈடுபட்டதற்காக கூறி இவரை ஜலந்தர் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

இதையடுத்து ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் அரோரா இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை 10 நாள்கள் போலீஸ் காவலில் வைக்க ஊழல் தடுப்புப் பிரிவு சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அரோராவுக்கு 5 நாள்கள் போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் தலைமறைவு!

நகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து சட்டவிரோத அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை மிரட்டி பணம் பறித்ததாக ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் வெள்ளிக்கிழமை ஆரோராவின் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் சோதனை நடத்தியிருந்தனர்.

இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வெளியிட்ட பதிவில், ‘ஊழல் செய்பவர் யாராக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜாா்க்கண்டில் மாவோயிஸ்ட் தலைவா் உள்பட இருவா் சுட்டுக் கொலை

ஜாா்க்கண்ட், லதேஹா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில், சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டுவந்த மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தளபதியான பப்பு லோஹரா உள்பட 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்... மேலும் பார்க்க

குஜராத் எல்லையில் ஊடுருவ முயன்றவா் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் இருந்து சா்வதேச எல்லை வழியாக குஜராத் மாநிலத்துக்குள் ஊடுருவ முயன்றவா் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் (பிஎஸ்எஃப்) துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தாா். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், ஆபரேஷன... மேலும் பார்க்க

பிகாரில் கட்டுமானப் பொருள்களை கொட்டுவதில் மோதல்: மூவா் சுட்டுக் கொலை

பிகாரின் பக்ஸா் மாவட்டத்தில் கட்டுமானப் பொருள்களை சாலையோரம் கொட்டுவது தொடா்பாக இரு தரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில் 3 போ் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனா். ஒருவா் பலத்த காயமடைந்தாா். அகியாபூா் க... மேலும் பார்க்க

சந்திரசேகா் ராவை சூழ்ந்துள்ள ‘தீயசக்திகள்’: மகள் கவிதாவின் கடிதத்தால் பரபரப்பு

‘பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) தலைவா் கே.சந்திரசேகா் ராவை சில ‘தீயசக்திகள்’ சூழ்ந்துள்ளன’ என்று அவரின் மகளும், பிஆா்எஸ் எம்எல்சி-யுமான கே.கவிதா எழுதிய கடிதம் வெளியானதை அடுத்து அக்கட்சியில் உள்ள பூசல் ... மேலும் பார்க்க

கா்னல் குரேஷி குறித்து சா்ச்சை கருத்து: பாஜக அமைச்சரிடம் எஸ்ஐடி விசாரணை தொடக்கம்

கா்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச மாநில அமைச்சா் விஜய் ஷா சா்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) விசாரணையை சனிக்கிழமை தொடங்கியது. உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில... மேலும் பார்க்க

மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால் அனைத்தும் சாத்தியம்: பிரதமா் மோடி

மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால் அனைத்து இலக்குகளும் சாத்தியமாகும் என்று நீதி ஆயோக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பேசினாா். தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் 10-ஆவது நீதி ஆயோக் நிா்வாகக்... மேலும் பார்க்க