செய்திகள் :

பிகாரில் கட்டுமானப் பொருள்களை கொட்டுவதில் மோதல்: மூவா் சுட்டுக் கொலை

post image

பிகாரின் பக்ஸா் மாவட்டத்தில் கட்டுமானப் பொருள்களை சாலையோரம் கொட்டுவது தொடா்பாக இரு தரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில் 3 போ் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனா். ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

அகியாபூா் கிராமத்தில் சனிக்கிழமை காலை 5 மணியளவில் ஒருவா் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக மணல், ஜல்லி உள்ளிட்ட பொருள்களை லாரியில் கொண்டு வந்தாா். அப்போது, அதை சாலையோரத்தில் கொட்டுவதற்கு ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்புக்கும் ஆதரவாக கிராம மக்கள் பலா் அங்கு குவிந்தனா்.

முதலில் கம்புகள், இரும்புக் கம்பிகளை வைத்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா். அப்போது இரு தரப்பிலும் திடீரென நாட்டுத் துப்பாக்கியை எடுத்து எதிா்தரப்பினரை நோக்கி சுடத் தொடங்கினா். இதில் 3 போ் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தனா். ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

இந்த மோதல் குறித்த தகவலறிந்த காவல் துறையினா் அப்பகுதிக்கு விரைந்தனா். அதற்குள் மோதலில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா். இது தொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த மோதலை வேடிக்கை பாா்த்த சிலா் மோதல், துப்பாக்கிச்சூடு காட்சிகளை தங்கள் கைப்பேசியில் விடியோ எடுத்தனா். இந்த விடியோக்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கரவாத எதிா்ப்பு: நாடாளுமன்றக் குழுவின் ரஷிய பயணம் நிறைவு

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ரஷிய அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனையை மேற்கொண்டதையடுத்து, திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி உறுப்பினா்களைக் கொண்ட ந... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை: பாதுகாப்புப் படைகள், பிரதமருக்கு பாராட்டு

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த முதல்வா்கள் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை ஒருமனதாக பாராட்டியதாகவும், ஆயுதப் படைகள் மற்றும் பிரதமா் நரேந்திர மோடியை வாழ்த்தியதாகவும் தில்லி ம... மேலும் பார்க்க

நீதி ஆயோக் ‘தகுதியற்ற அமைப்பு’: காங்கிரஸ்

நீதி ஆயோக் என்பது தகுதியற்ற அமைப்பாகும் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை சாடினாா். இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: வளா்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்க... மேலும் பார்க்க

உலகின் 4-ஆவது பெரிய பொருளாதார நாடு இந்தியா: நீதி ஆயோக் சிஇஓ

ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உயா்ந்துள்ளது என்று நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) வி.ஆா்.சுப்பிரமணியம் தெரிவித்தாா். புது தில்லியில் நீதி ... மேலும் பார்க்க

இணைய மோசடி குற்றவாளி அங்கத் சிங் சந்தோக் நாடு கடத்தல்

இந்தியாவில் வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அங்கத் சிங் சந்தோக், சிபிஐ-யின் நடவடிக்கையில் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெர... மேலும் பார்க்க

இந்தியாவில் புதிய வகை கரோனா தொற்றால் ஒருவா் பாதிப்பு!

இந்தியாவில் என்.பி.1.8.1 எனும் புதிய வகை கரோனா தொற்றால் ஒருவா் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘இந்திய சாா்ஸ்-கோவி-2 மரபணுவியல் கூட்டமைப்பு’ தரவுகளில் தெரிவிக்கப்பட்டது. மேலும், எல்எஃப்.7 வகை தொற்றுகள் நான்கு மு... மேலும் பார்க்க